தோழர் என். சங்கரய்யாவின் மறைவை யொட்டி, அவருக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை: இந்திய இடதுசாரி இயக்கத்தின் அடையாள மாகத் திகழ்ந்தவரும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, தாய்நாட்டு விடுத லைக்காக 9 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவருமான தோழர் என். சங்கரய்யா மாபெரும் தலைவர் ஆவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமான போது மிக முக்கியமான தலைவராக இருந்து செயல்பட்டவர். இந்திய நாடு முழுவதும் விவசாயிகளை அணிதிரட்டுவதற்காக அயராது பாடுபட்டவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் பொதுச்செயலாளராகவும், அகில இந்தியத் தலைவராகவும் பொறுப்பேற்று திறம்பட செயலாற்றியவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று தமிழ்நாட்டில் தமிழக விவசாயிகளை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்தியவர். தன் வாழ்நாள் முழுவதும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களில் களம் கண்ட மரியாதைக்குரிய தலைவர் தோழர் என்.சங்கரய்யா. 3 முறை சட்டமன்ற உறுப்பின ராகவும் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் பல்வேறு விவசாயிகள் பிரச்ச னைகளுக்காக குரல் கொடுத்தவர். வயது மூப் பின் காரணமாக இன்று மறைந்த என்.எஸ் அவர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலக்குழு சார்பில் நெஞ்சார்ந்த அஞ்சலி யைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அனைத்து கிளைகளிலும் சங்க கொடிகளை மூன்று நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடும் படி கேட்டுக் கொள்கிறோம்.