states

சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்!

சென்னை, நவ. 22 - சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடி யாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தி யுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு கூட்டம் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.  சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு  மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் விரோத மாக- அரசியல் சாசனத்தை மதிக்காமல் செயல்பட்டு வருவது குறித்து தொடர்ந்து பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரு கிறது.

இருப்பினும், ஆளுநர் தனது போக்கை தொடர்ந்து வருகிறார். இதன் ஒருபகுதியாகவே தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பிலேயே போட்டு வைத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை முடக்கி வருகிறார். ஆளுநரின் இந்த போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அர சின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதி மன்றமும் ஆளுநரின் நடவடிக்கை  குறித்து கடுமையான விமர்சனங் களை தெரிவித்திருந்தது.  இப்பின்னணியில் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் அரசுக்கு ஆளு நர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் 10 மசோதாக்களையும் நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. அரசியல் சாசனப்படி ஆளுநர்  இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல்  வழங்குவதைத் தவிர வேறு வழி யில்லை. எனவே, தாமதமில்லாமல் உடனடியாக ஆளுநர் இம்மசோதாக் களுக்கு ஒப்புதல் வழங்கிட வேண்டு மென சிபிஎம் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

செய்யாறு அருள் மீதான குண்டர்   சட்டத்தை திரும்பப் பெறுக! 

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் ஏற்கனவே இரண்டு சிப்காட் வளாகங்கள் இயங்கி வரும் சூழ்நிலையில் மூன்றா வதாக ஒரு சிப்காட் வளாகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. தங்களது நிலம் கையகப்படுத்து வதை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது அதிகாரிகள் வழக்குப் போட்டுள்ளதுடன் விவசாயிகளைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறை யில் அடைத்திருப்பது கண்டனத்திற்கு உரியதாகும். அதிகாரிகளின் தவ றான நடவடிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தவுடன் விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் திரும்பப்பெறப்பட்டு உள்ளது ஆறுதல் அளிக்கும் நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை வரவேற்பதோடு, ஒருங்கிணைப் பாளர் அருள் மீதான குண்டர் சட்டத்தையும், விவசாயிகள் மீது பதிவு  செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசு தேவைக்கு நிலம் கையகப்படுத்தும் நிகழ்வுகளில் விவசாயிகளுடைய முழுமையான ஒப்புதல் அடிப்படையில் மட்டுமே நிலங்களை கையகப்படுத்திட வேண்டுமெனவும், விவசாயி களை வழக்கு போட்டு அச்சுறுத்தி கையகப்படுத்தும் போக்கினை எதிர்கா லத்தில் தொடரக் கூடாது எனவும் சிபிஎம் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.