states

தீக்கதிர் விரைவு செய்திகள்

விக்கிரவாண்டி: வேட்பு மனு தாக்கல் துவங்கியது

விழுப்புரம், ஜூன் 14- விக்கிரவாண்டி சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) தொடங்கியது. முதல் நாளில் கே.பத்ம ராஜன், அக்கினி ஆழ்வார், ராஜேந்திரன் ஆகிய நான்கு சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பாமக போட்டி: அண்ணாமலை  அறிவிப்பு

சென்னை, ஜூன் 14- விக்கிரவாண்டி தொகுதி யில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னி யூர் சிவா வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளார். அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனி டையே, விக்கிரவாண்டி சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர் தலில் தேசிய ஜனநாயக கூட் டணி சார்பில் பாமக போட்டி யிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

மீன்பிடித் தடைக்காலம் முடிவுக்கு வந்தது

சென்னை, ஜூன் 14- மீன்களின் இனப்பெரு க்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரையிலான 61 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் கடலில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை  செய்யப்படுகிறது. அதன்படி  கடந்த ஏப்ரல் 15 அன்று துவங் கிய மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14 நள்ளிரவுடன் முடி வுக்கு வந்துள்ளது.

அகவிலைப்படி 9 சதவிகிதம் உயர்வு 

சென்னை,ஜூன் 14- 2016-ம் ஆண்டுக்கு முந் தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் மாநில அரசு ஊழியருக்கான அக விலைப்படியை 01.01.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, மாநில அரசு ஊழியருக்கு அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அக விலை ஊதியத்தில் 239 சத வீதமாக உயர்த்தி வழங்கப் படும். ஜனவரி முதல் மே   வரையிலான அகவிலைப் படி நிலுவை, மின்னணு சேவை மூலம் வழங்கப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2200 புதிய பேருந்துகளுக்கு டெண்டர்!

கடலூர், ஜூன் 14- தமிழகத்திற்கு ஏற் கனவே 2000 புதிய பேருந்து கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 850 புதிய பேருந்துகள் பயன் பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மாதந்தோறும் 200  புதிய பேருந்துகள் பயன் பாட்டுக்கு வருவதற்கு நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. இதற்கிடை யில் 2200 புதிய பேருந்து கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் தெரிவித்துள்ளார்.