புதுதில்லி, செப். 11- மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப் பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை எடிட்ட ர்ஸ் கில்ட் ஆப் இந்தியா அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 முதல் 10 வரை மணிப்பூரில் முகாமிட்டு ஆய்வுசெய்து செப்டம்பர் 2 அன்று அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையால் ஆத்திரமடைந்த மணிப்பூர் பாஜக அரசு எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது வழக்கு தொடந்தது. இந்த வழக்கு தொடர் பான 2-ஆம் கட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்க ளன்று நடைபெற்றது. வழக் கை விசாரித்த தலைமை நீதி பதி டி.ஒய்.சந்திரசூட் தலை மையிலான அமர்வு “எடிட்ட ர்ஸ் கில்ட் ஆப் இந்தியா (EGI)” நிர்வாகிகளான பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சீமா முஸ்தபா, சஞ்சய் கபூர், சீமா குஹா, பாரத் பூஷன் ஆகிய 4 பேர் மீது செப்டம்பர் 15 வரை எந்தவிதமான கட்டாய நடவடிக்கை எடுக்க கூடாது என மணிப்பூர் பாஜக அரசிற்கு உத்தரவிட்டது. இவர்கள் மீது மோதலை தூண்டும் முயற்சி, அவதூறு ஆகிய பிரிவுகளின்கீழ் மணிப்பூர் அரசு வழக்குப் பதிவு செய்திருந்தது.