சென்னை, மே 11- வரி ஏய்ப்பு செய்யக் கூடியவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை கொடுப்போம் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றும் அலுவலர்க ளுக்கு விருதுகளை அவர் வழங்கினார். பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் காலங்க ளில் வணிகவரித் துறை மற்றும் பதிவுத் துறையில் வருவாய் ஈட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வரி ஏய்ப்பு செய்யக்கூடியவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்குவோம். வரி ஏய்ப்பு செய்பவர்களை அரசு கண்டறிந்து நடவடி க்கை எடுப்பதற்கு முன்பு அவர்கள் தாமாகவே முன் வந்து வரியை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.