சென்னை, ஆக.28-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரி யர் சங்கத்தின் மாநில தேர்தல் மற்றும் மாநில பொதுக்குழுக் கூட்டம் சிவகங்கையில் ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்றது.
மாநில தேர்தல் ஆணையராக. பாபு, உதயசூரியன், இணை ஆணை யராக மதலைமுத்து, நிம்ரோத் செயல்பட்டனர்.
இந்த தேர்தலில் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் பொதுச் செயலாளர் அ.சங்கர், மாநில பொருளாளர் க.சு.பிரகாசம், மாநில அமைப்பு செயலாளர் கே. வெங்கட் ராமன், மாநில துணை பொது செயலாளர் ம. எட்வின் பிரகாஷ், மாநில தலைமையிடச் செயலாளர் ச.வெங்கடேசன், மாநில மகளிர் அணி செயலாளர் டி .என்.சங்கீதா தேவி, மாநிலச் செயலாளர் சு.ஹெர்பட் ராஜ சிங், மாநிலச் செயலாளர் (தனியார் பள்ளி) க.ரவிச்சந்திரன், மாநில இணைச் செயலாளர்களாக எம்.ராஜ ரத்தினம், நீ.காட்டு துரை, ச.சகாய ஆரோக்கிய ராஜ், மாநில துணைத் தலைவர்களாக கோ.ஆதிலட்சுமி அ.அருணகிரியார், ஏ. தவமணி செல்வம், பெ. இளங்கோ ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட னர்.