ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வானது, அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று 16ஆவது நிதி ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆர்.சச்சிதானந்தம் - எம். சின்னத்துரை நிதி ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரை யாற்றிய ஆர். சச்சிதானந்தம், நிதி ஆணையம் என்னென்ன மாறுதல் கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுப் பேசினார். மேலும், எழுத்துப் பூர்வமான ஆலோசனைக் கடிதத்தையும் அளித்தார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம்
மேலும், பின்னர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி., எம். சின்னத்துரை எம்எல்ஏ ஆகிய இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப் போது, “’நிதிப் பகிர்வு அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்து வப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்’ என்று நிதி ஆணையத்திடம் வலியுறுத்தினோம்” என்றனர். தொடர்ந்து பேசிய அவர்கள், “வட மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு அதிகமாக தொழிலாளர்கள் வந்துள்ளதால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தோம். மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்குக! சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம், மதுரை, கோவையில் மெட்ரோ திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டும்; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியைத் துவக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினோம் என்று கூறினர்.
(முழு விபரம் : 5)