சென்னை,பிப்.15- தமிழ்நாடு தேர்தல் ஆணையர் வயது வரம்பை உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. தமிழ்நாட்டின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துகின்ற தன்னாட்சி அமைப்பு தமிழ்நாடு தேர்தல் ஆணையம். தன்னாட்சி அமைப்பான அதற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வெ.பழனி குமார் நியமிக்கப்பட்டார். பழனி குமாரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மே இறுதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு மார்ச் 9 வரை அவரின் பதவி காலத்தை நீட்டித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்.15 அன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி கள் சட்டத்தின் உட்பிரிவுகளில் படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது. மேலும், அதன் தொடர்ச்சி யாக இரண்டு முறை மீண்டும் நியமிக்கப்படு வதற்கு தகுதி உடையவர் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பதவிக்காலம் 6 ஆண்டு களுக்கு வகுக்கலாம் என சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டிருந்தது. அதோடு அவர் பதவி காலத்தில் 65 வயதினை நிறைவு செய்தால் அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இந்த நிலையில் தான் பல மாநிலங்களில் மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வரை எது முந்தை யதோ அதுவரை பதவி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடை முறையே தமிழ்நாட்டிலும் நடைமுறைப் படுத்தும் விதமாக 2011 ஆம் ஆண்டு மாநில தேர்தல் ஆணையர் பதவியேற்ற காலத்தின் இருந்து 5 அல்லது 6 ஆண்டுகள் அல்லது 65 வரை இவற்றில் எது முந்தையதோ அது வரை பதவியில் இருப்பதற்கும், நீட்டிப்பு கான வகைமுறை எதுவும் இல்லாமல் இருக்கவும் வழிவகை செய்வதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு அளித் திருந்த நிலையில் ஒன்றிய அரசின் ஊராட்சி அமைச்சகம் இதை ஏற்றுக் கொண்டிருக் கிறது. இதனை சட்டமாக கொண்டு வருவதற் காக 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி கள் சட்டத்தை திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான சட்டம் முன்வடி வும் பேரவையில் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இதில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யர் பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டு கள் அல்லது 65 வரை எது முந்தையதோ அதுவரை பதவியில் இருத்தல் வேண்டும். அவர் மறுபணியமர்த்தத்திற்கு தகுதிவுடைய வர் இல்லை என்றும் திருத்தம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பிற மாநிலங்களில் உள்ள மாநில தேர்தல் ஆணை யரின் பணி நிபந்தனைகளுக்கு இணங்கிய முறையில், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்ய முடியு செய்யப்பட்டுள்ளது என அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது. பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறை வேறியது.