states

ஒரே நாடு ஒரே தேர்தல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

சென்னை, செப். 4- ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு  தலைமை தேர்தல் அதிகாரிக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 35 விழுக்காடு கூடுதலாக வைத்திருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் மாதம் வாக்காளர்  பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்க உள்ளதாகவும், முதல்  வாரம் வாக்களர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடு முழுவ தும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஒரே நாடு  ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும்  இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு தேர்தல் அதிகாரிக்கு வரவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றுவோம் என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.