states

வழக்கறிஞர் மதிவதனியை தாக்க முயற்சித்த அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை,அக்.4-  மக்கள்  அரங்கம் நிகழ்ச்சியில் வழக் கறிஞர் மதிவதனியை தாக்க முயற்சித்த அர்ஜுன் சம்பத்  மீது  காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மாலைமுரசு சார்பில் நடந்த மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறி ஞர் மதிவதனியை தாக்க முயற்சி செய்த இந்து மக்கள்  கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன்  சம்பத்தின் அநாகரிகமான, அடாவடித்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். சென்னையில் மாலை முரசு தொலைக்காட்சி சார்பில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு அரசியல் நியாயமான தா? உள்நோக்கமானதா?எனும் தலைப்பில் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர். அப்போது   திராவிடர் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மதிவதனி  பேசிய போது  இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்  தனது இருக் கையில் இருந்து எழுந்து சென்று மதி வதனியை  தாக்க முயற்சி செய்துள் ளார். மேடையில் இருந்த தொகுப்பாளர் மற்றும் இதர பேச்சாளர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.  தொலைக்காட்சி விவாதங்களில்

இது போன்ற பொது அரங்குகளில் பாஜ கவின் இந்துத்துவா பேச்சாளர்கள் பங் கேற்கும் போது மற்ற பேச்சாளர்களை பேசவிடாமல் இடையூறு செய்வது, அநாகரிகமாக பேசுவது, அடாவடித் தனத்தில் ஈடுபடுவது போன்ற சம்பவங் கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இட துசாரி சிந்தனை கொண்ட பேச்சு, இந்துத்துவா கொள்கையை எதிர்த்து பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடும்  யாராக இருந்தாலும் அவர் களை தரக்குறைவாக பேசி தாக்குவது என்பது தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடந்து வருகிறது. சபை  நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்ளக் கூடிய இப்படிப்பட்ட பேச்சாளர் களை அழைப்பது குறித்து தொலைக் காட்சிகள் பரிசீலிக்க வேண்டும்.  பொதுவாக பெண் ஆளுமைகள் குறித்தும் துணிச்சலோடு கருத்துக் களை பதிவிடும் சமூக செயல்பாட்டா ளர்கள் மீதும்  சமூக வலைதளங்களில் தவறாக பதிவிடுவது, பொது மேடை களில் பெண்களுக்கு உரிய மரி யாதை காக்கப்படாமல் தொடர்ந்து  அவ மரியாதையை ஏற்படுத்துவது போன்ற வைகள்  நடைபெற்று வருகிறது. பெண் களின் அரசியல் பங்கேற்பு  மற்றும் ஜனநாயக ரீதியாக கருத்துக்களை  பதிவிடுவது போன்றவைகளுக்கு எதி ரான தாக்குதலாகும்.  மதவாத கருத்துக்களுக்கு எதிராக பெண்ணுரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல  மேடைகளில் தன்னுடைய கருத்தை பதிவு செய்து வரும் மதிவதனிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் துணை  நிற்கும். மதிவதனியை தாக்க முயற்சித்த அர்ஜுன் சம்பத் மீது உரிய நடவடிக்கை யை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளனர்.