states

குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு : தண்டனை தந்து தடுத்துவிட முடியாது

புதுதில்லி குழந்தை திருமணம் தொடர்பான சட்டத்தை சில மாநிலங்கள் முறை யாக கடைப்பிடிக்காததால் நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்று பொதுநல வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே.பி.பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளியன்று (அக்.,18) விசாரித்தது.  இருதரப்பு வாதத்திற்கு பிறகு நாடு முழு வதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்கள்: 1. சிறுவர்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். 2.    குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது. 3. நாடு முழுவதும் குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 4. குழந்தை திருமணத்தைத் தடுக்க அனைத்து அரசு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 5. குழந்தை திருமண விவகாரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு வது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும். ஆகிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.