நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியிடையில் இறந்தால் அல்லது மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றால், அவர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களில் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டு வந்தது. 2022ல் வெளியிடப்பட்ட அரசாணை 152ன் படி மாநகராட்சிகளில் வாரிசு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஆனால் 2023ல் வெளியான அரசாணை 10ல் கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போது நிலைமை வேறு விதமாக உள்ளது. நகராட்சி, மாநக ராட்சிகளில் பணியிடையில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை கிடைப்பது கானல் நீராக மாறிவிட்டது. குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் பலர் 60 வயதிற்கு முன்பே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலை உள்ளது. 2022 முதல் கல்வித் தகுதி உள்ள நூற்றுக்கணக்கான வாரிசுதாரர்களுக்கு காலியிடம் இல்லாததால் வேலை வழங்க முடியவில்லை. ஏற்கனவே ஆயி ரக்கணக்கான பணியிடங்கள் ஒழிக்கப் பட்டதால், தற்போது பணிபுரிபவர்கள் ஓய்வு பெற்றாலும் காலிப்பணியிடங்கள் உருவாக வாய்ப்பில்லை. நகராட்சிகளில் 8ம் வகுப்பு படித்த வர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட டி கிரேடு (D grade) பணியிடங்கள் தற்போது முற்றிலும் ஒழிக்கப்பட்டதால், இறந்து போன சுமார் 450 ஊழியர்களின் வாரிசுகளுக்கான கோப்புகள் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் தேங்கி உள்ளன. மேலும் கருணை அடிப்படை நியமனத்திற்கான காலிப்பணியிட ஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 5 சதவீத மாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் வாரிசு வேலை வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த விவ காரத்தில் உடனடியாக தலையிட்டு, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கா. முருகானந்தம் மாநிலத் தலைவர், தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம்