states

img

சேலம் மாநகரில் தீண்டாமைச் சுவர்!

சேலம், அக்.18- சேலம் மாநகரில் உள்ள தீண்டாமைச் சுவர் குறித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் கருத்து கேட்டறிந்தனர். சேலம் மாநகராட்சி, 16 ஆவது வார்டுக்குட்பட்ட புதூர் கல்லாங்குத்து பகுதி யில் சுமார் 300க்கும் பட்டி யலின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் மேற்கு திசையில் நாகம் மாள்தோட்டம் அய்யர்காடு குடியிருப்பு பகுதி உள்ளது.  இந்த இரண்டு பகுதிகளுக் கும் நடுவே 2 அடி அகலத் தில் 200 அடி நீளத்திற்கு கருங்கல் சுவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இச்சுவரை ஒட்டி மாநகராட்சி தார்ச்சாலை அய்யர்காடு பக்கமாக உள்ளது. ஆனால், இச்சாலையை பட்டியலின மக்கள் பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது. இதனையறிந்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.  இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி, 36 ஆவது வார்டுக்குட்பட்ட தாதம்பட்டி பகுதியில் 16.56 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து  வருகிறது. இதனை சாமு வேல்ராஜ் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலை வர் ஆர்.குழந்தைவேல், மாவட்டச் செயலாளர் வீ.இளங்கோ, மாவட்ட நிர்வாகி சண்முகம், மார்க் சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கே.வசந்தி, மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி ஆகி யோர் கலந்து கொண்டனர்.