states

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க மாநில அரசு அனுமதி

சென்னை, ஜூலை 23- சென்னையில் தடை  செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோ தமாக விற்பனை செய்வ தற்காக, அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரி கள் மற்றும் சென்னை  மாநகராட்சி அதிகாரிக ளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக  குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதி காரிகள், பல்வேறு இடங்க ளில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கை ப்பற்றி னர். 2017 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் இந்த வழக்கு 2018 ஆம்  ஆண்டு சிபிஐக்கு மாற்றப் பட்டது. இந்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், குட்கா வழக்கில் முன்னாள்  அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழு தியது. இதையடுத்து, குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்த ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேரிடம் விசா ரணை நடத்த உள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் குட்கா வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.