காவிரி : செப்.6ல் தமிழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை
காவிரி தொடர்பாக தமிழகம் தொடர்ந்த வழக்கை செப்டம் பர் 6-ல் விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் அமர்வு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு 24,000 கன அடி நீர் திறக்க கோரியிருந்த நிலையில் கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரு கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடுவதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அந்த தண்ணீர் போதாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. உச்சநீதி மன்ற நீதிபதி கவாய் அமர்வானது, கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி காவேரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தி யதா? கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீ ரை திறந்து விட்டுள்ளதா? என்பது குறித்து செப்டம்பர் 1ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனிடையே ஆகஸ்ட் 28, 29-ல் காவேரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மீண்டும் தண்ணீரை திறந்து விடுவதற்கு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. உத்தரவுப்படி தற்போது கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்த சூழலில் வழக்கு விசா ரணை வெள்ளியன்று பட்டியலிடப்படாத நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் விரைந்து விசாரிப்பதற்கு கர்நாடக அரசு சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கை 11ம் தேதிக்கு விசாரித்தால் போதும் என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்து கர்நாடக அரசின் கோரி க்கையை நிராகரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப் பட்டதை அடுத்து வழக்கை புதன்கிழமை (செப்.6) விசாரிப்பதாக அறிவித்தனர்.
ஹாசன் மக்களவை உறுப்பினர் தகுதி நீக்கம்
ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவை கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரமாணப் பத்திரத்தில் பொய்யான தகவல்களை சமர்ப்பித்த தற்காக தகுதி நீக்கம் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள் ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா. சொத்து விவரங்கள், பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது.
ஒன்றிய அமைச்சர் வீட்டில் துப்பாக்கிச்சூடு
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வில் ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீடு ஒன்று உள்ளது. இங்கு இளைஞர் ஒருவர் துப்பாக்கி குண்டு பட்டு தலையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தக வல் கிடைத்தது. அதன்படி நிகழ்விடத் திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அமைச்ச ரின் மகனான விகாஸ் கிஷோரும், உயிரிழந்த வினய் ஸ்ரீவத்சவாவும் நண்பர்கள் என தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி சம்பவம் நடந்த இடத்திலிருந்து விகாஸ் கிஷோரின் துப்பாக்கியும் சிக்கியிருப்பதால் சந்தேகம் வலுத்துள்ளது. மேலும், இரவு 6 பேர் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட தும் அதற்கு பின்னரே இந்த கொலை நடந்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனிடையே சம்பவம் நடந்த போது தனது மகன் அங்கு இல்லை என்றும் தில்லியில் இருந்ததாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே உயிரிழந்த வினய் ஸ்ரீவத்சவா மரணம் குறித்து விசாரணை நடத்தும்படி அவரது சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் தற்போது வழக்கு பதிவு செய்து விகாஸ் நண்பர்கள் மூவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சு, கட்டுரைப் போட்டி
சென்னை, செப்.1 ஸ்ரீராம் இலக்கியக் கழகம், வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 19 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி களை நடத்தவுள்ளது. இப்போட்டிகள், 12 மையங்களில் நடத்தப்படும். சென்னை யில், அக்.7 அன்று அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், அக். 14 அன்று கிழக்கு தாம்பரத்திலுள்ள கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்; புதுச்சேரியில், அக். 15 அன்று மறைமலை அடிகள் சாலையிலுள்ள செயின்ட் ஆண்டனி’ஸ் உயர்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. சென்னை, புதுச் சேரி தவிர, அக். 8 வேலூரிலும், அக்.21 தஞ்சாவூரிலும், அக். 22 திருவாரூரிலும், அக். 28 சேலத்திலும், அக். 29 திருச்சியிலும், நவ. 4 நெல்லையிலும், நவ. 5 மதுரை யிலும், நவ. 18 கோவையிலும், நவ. 19 ஈரோட்டிலும் நடை பெறவுள்ளது. இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அரு கிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளில் பெற்றுக் கொள்ள லாம். அல்லது www.shriramchits.com என்ற இணைய தளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வந்து சேர வேண்டிய கடைசித் தேதி, செப். 30 ஆகும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம்
சென்னை, செப். 1- ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணி புரியும் 98 பகுதி நேர தொகுப்பூதியத் தூய்மைப் பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி, சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சேலம், இராமநாதபுரம், திரு வண்ணாமலை, செங்கல்பட்டு, விருது நகர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட் டங்களில் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்தும் தொடர்ந்து பணி புரிந்து வரும் பணியாளர்கள் சிறப்பு கால முறை ஊதியம் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, ரூ.3,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் 98 பேரை முழு நேர தூய்மைப்பணி யாளர்களாக மாற்றி, சிறப்பு காலமுறை ஊதியம் நிலை-2 ரூ.4,100, 12,500 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, 98 தூய்மை பணியாளர்களை முழு நேர தூய்மைப் பணி யாளர்களாக மாற்றி அமைத்தும், அதற்காக ரூ. 39 லட்சத்து 91ஆயிரத்து 344 நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.