states

img

நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு உடுமலையில் துவங்கியது

உடுமலை, செப்.8-  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாடு உடுமலையில் வெள்ளியன்று துவங்கியது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை எஸ்.வி.புரம் விஜயா மஹா லில் வெள்ளியன்று கொடியேற்றத்து டன் துவங்கிய மாநில பிரதிநிதித் துவ மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.   தலைமைச்செய லக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடே சன் துவக்கவுரையாற்றினார். வேலையறிக்கையை மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ், வரவு - செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் ஆகியோர் சமர்ப்பித்தனர். நெடுஞ்சாலைத்துறை யின் தலைமைப்பொறியாளர் இரா.சந்திரசேகரன், நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் இரா.சரவணன் மற்றும் கோட்டப் பொறியாளர்கள் ஜெ.கு.ரமேஷ் கண்ணா, வெ.ராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். இதன்பின் வெள்ளியன்று மாலை  எஸ்.வி. புரம் பேருந்து நிலையம் அரு கில் சிறப்பு கருந்தரங்கம் நடை பெற்றது. இதில் ‘‘கல்வியும் வேலை வாய்ப்பும் எங்கே?” என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.செல்வா மற்றும் “மாற்றத்தை நோக்கி பயணிப்போம்’’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று (இன்று) மாலை யில் சாலைப்பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ளும் பேரணி நடைபெறுகிறது. பின்னர் மாநாட்டு தீர்மானங்களை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.