states

நெல்லை கல்குவாரி விபத்து - மீட்புப் பணிகள் நிறுத்தம்

வருவாய், கனிமத்துறை முதன்மைச் செயலாளர்கள் ஆய்வு

திருநெல்வேலி, மே 16- நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடை மிதிப் பான்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் இறந்துவிட்டார்.இந்த பாறை சரிவில் சிக்கி உள்ள மேலும் 3 பேரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி  எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த விபத்து நடந்துள்ளது என்று பொதுமக்கள் மற்றும் பாறைச் சரிவில் சிக்கியவர்களின் உற வினர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக குவாரி உரிமம் மற்றும்  அங்கு வெட்டி எடுக்கப்பட்டு உள்ள கனிமங்களின் அளவு உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார். மேலும்  தமிழக அரசும் இது குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டிருந்தது.

அதன் அடிப்படையில் திங்கட்கிழமை சம்பவம் நடந்த இடத்துக்கு வரு வாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல் ராஜ் ஆகியோர் சென்று ஆய்வு செய்த னர். அவர்கள் தலைமையிலான குழு குவாரியின் மொத்த பரப்பளவு, வெட்டி எடுக்கப்பட்டுள்ள கனிம வளங்களின் அளவை ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி, மே 16- நெல்லை மாவட்டம் முன்னீர்பள்  ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் தனியார் கல் குவாரியில் சனிக்கிழமை இரவு 400 அடி ஆழத்  தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்த போது ராட்சத பாறை உருண்டு விழுந்  தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் பாறை களின் இடிபாடுகளில் சிக்கினர்.மேலும் அங்கு நின்ற லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்களும் இடி பாடுகளில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் குவா ரிக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடு பட்டனர்.அப்போது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த விட்டிலா புரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் காயங்களுடன் மீட்  கப்பட்டனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடை பெற்று வந்த நிலையில் சுமார் 17 மணி  நேர போராட்டத்திற்கு பிறகு இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதற்கிடையே பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் (30), தச்சநல்லூர் ஊரு டையான்குளத்தை சேர்ந்த ராஜேந்தி ரன், ஆயன்குளத்தை சேர்ந்த மற்  றொரு முருகன் (23) ஆகிய மேலும்  3 பேர் கதி என்ன? என்று தெரிய வில்லை. சுமார் 400 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் வர வழைக்கப்பட்டனர். ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு சம்பவ இடத்திற்கு வந்தடைந்த அந்த குழு குவாரியை  முழுமையாக ஆய்வு செய்தது. தொடர்ந்து இரும்பு கயிறு மூலமாக எவ்வாறு பாறை சரிவில் சிக்கிய வர்களை மீட்கலாம் என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் சுமார் 50 ஆயி ரம் டன் எடை கொண்ட பாறாங்கற் கள் இதில் சரிந்து உள்ளது. அதில் இருந்து 3 பேரையும் மீட்பது என்பது சிரமமான ஒன்றுதான். எனினும் 3 பேரையும் உயிருடன் மீட்க போராடு வோம். எங்களால் முடிந்தவரை அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்வோம் என்று கூறினர். 

இதையடுத்து திங்கட்கிழமை அதிகாலை முதலே பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் 2 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.2வது நாளாக நடைபெறும் இந்த மீட்பு பணியில் தீயணைப்பு  துறை மற்றும் காவல் துறையின ரும் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் பலனாக இடிபாடுகளில் சிக்கி யிருந்த 3 தொழிலாளர்களில் ஒரு வரை மட்டும் காண முடிந்தது. ஆனால்  பாறை இடிபாடுகளுக்குள் சிக்கி  இருந்த அவரையும் மீட்க முடியா மல் இருந்தது. இந்நிலையில் திங்கட்  கிழமை மீட்பு பணிகள் நடைபெற்ற போதே 2 முறை பாறைகள் சரிந்து விழுந்தது. இதனால் குவாரியில் சுமார் 400 அடி ஆழத்தில் சிக்கி உள்ள 3 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத னால் உரிய பாதுகாப்பு வசதிகளு டன் மீட்புப் பணியை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்  கப்பட்டு வருவதாக அதிகாரி கள் தெரிவித்தனர். இதுவரை 3 தொழிலாளர்களும் மீட்கப்படாத தால் அவர்களின் குடும்பத்தினர், உற வினர்கள் கவலை அடைந்துள்ளனர்.  இதற்கிடையே கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக குவாரி உரிமையாளர் சங்கர நாராயணன், ஒப்பந்ததாரர்கள் செல்வராஜ், குமார் மற்றும் மேலாளர் ஜெபஸ் டின் ஆகிய 4 பேர் மீதும் 3 பிரிவு களில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். இதில் சங்கர நாராயணன், ஜெபஸ்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்  பட்டு உள்ளதால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்  பட்டு உள்ளனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்  நிலையில் பாறைகளில் பெரிய அள வில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் அவை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டன.