மன்மோகன் சிங் எச்சரிக்கை
புதுதில்லி, ஏப். 23 - “மக்களிடையே வெறுப்பை தூண்டிவிட்டு ஒற்றுமை யை சீர்குலைப்பது போன்ற செயல்கள், நாட்டிற்கு அழிவை நோக்கிய அவமானகரமான சரிவையே தரும்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதி யுள்ள கட்டுரையில் மன்மோகன் சிங் மேலும் குறிப்பிட்டு இருப்பதாவது: ரஷ்யா - உக்ரைன் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போதைய நெருக்கடியானது வர்த்த கத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகளை இந்தியா வுக்கு வழங்குகிறது. இந்தியா ஒரு பெரிய உற்பத்தியா ளராகவும், நுகர்வோராகவும் இருக்க முடியும். அதிகரித்து வரும் பணவீக்கம், நிலையற்ற கச்சா எண்ணெய் விலை, உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, பலவீனமான உள்நாட்டு தனியார் முதலீடு மற்றும் மோசமடைந்து வரும் நிதி நிலைமை, மாறி வரும் உலகளாவிய சூழ்நிலையில் விரிவாக்கப்பட்ட வெளிநாட்டு வர்த்தகம் இந்தியாவின் பொருளாதா ரத்தை காப்பாற்றவும், நமது இளைஞர்கள் மற்றும் பெண் களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பு களை உருவாக்கவும் சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இந்த வாய்ப்பை இந்தியா எவ்வாறு சிறப்பாகப் பயன் படுத்த முடியும்? புதிய பிரிவின் இருபுறமும் உள்ள நாடு களுடன் சுமுகமான உறவுகளுடன் இந்தியாவுக்கு நிலை யான மற்றும் நிறுவப்பட்ட உலகளாவிய பொருளாதார சூழல் தேவை. இந்தியா தனது அணிசேரா வெளியுறவுக் கொள்கையின் பெரிய முன்னுதாரணத்திற்குள் ஒரு மூலோபாய பொருளாதார சுயநலக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியம். இந்தியா மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருக்க வேண்டும் எனில், லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் இருப்பது அவசியம். அத்தகைய ஆலைகள் இயங்க அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களை உள்ள டக்கிய மக்கள் வேண்டும். அவர்களை இணைத்து செயல்பட வேண்டியது கட்டாயம். மகாத்மா காந்தியின் தேசமான இந்தியா. உள்நாட்டி லும் உலகளவிலும் அமைதியின் தூதராகவும் அகிம்சை யின் தூதராகவும் இருக்க வேண்டும். இந்தியா உள் நாட்டில் நிலவும் சமூக சமநிலையை பராமரிக்க வேண்டும். வகுப்புவாத எழுச்சியை முதலில் தடுக்க வேண்டும். அதுவே தற்போது அவசியமானது. பொருளாதார செழிப்பு கொண்ட மாளிகையை கட்டி யெழுப்புவது சமூக நல்லிணக்கம்தான். ஆனால், இந்தி யாவின் குடிமக்களிடையே அவநம்பிக்கையையும் கோபத்தையும் தூண்டி விட்டு சமூக ஒற்றுமை குலைக் கப்படுகிறது. மத வன்முறை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் மனித உயிர் இழப்புகள் ஆழ்ந்த வருத்தத்திற்கு உரியவை. இவை தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்கள், அழிவை நோக்கிய அவமானகரமான சரிவையே தரும்.” இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.