சென்னை,நவம்பர்.18- ஓய்வுபெறும் பேராசிரியர்களின் மறுநியமன உத்தரவை நீட்டித்து உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு 2025 மே 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வி ஆண்டின் இடையில் பேராசிரியர் பணி ஓய்வு பெற்றுச் செல்லும் போது, மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்பதால் ஏப்ரல் 30 வரை மறுநியமனம் செய்யப்படுவது வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது அந்த மறுநியமன நீட்டிப்பை மே 31 வரை நீட்டித்து உயர் கல்வித்துறை அரணை வெளியிட்டுள்ளது.