உள்துறை செயலாளரிடம் மாதர் சங்கம் கோரிக்கை
சென்னை, ஜூலை 14- செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் பழங்குடியின பெண்கள் படூர் பாலு என்பவ ரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விடக் கோரி அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தினர் உள்துறை செய லாளரை சந்தித்து மனு அளித்தனர். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர் உ.வாசுகி, மாநிலப் பொருளாளர் ஞா. பிரமிளா ஆகியோர் உள்துறைச் செயலா ளர் அமுதாவை சந்தித்து மனுஅளித்தனர். இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செய லாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் பழங்குடியின பெண்களை கொத்தடிமை களாக வேலைக்கு வைத்து பாலியல் பலாத் காரம் செய்த படூர் பாலு என்பவரை உடனடி யாக கைது செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். பிணை மனுவுக்கான வழிகாட்டுதல், பாலியல் வன்முறை (376 IPC) என்ற குற்றத்திற்கு பெறப்படவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை இந்த பிரிவுக்காக கைது செய்வதில் எந்த சட்ட ரீதியான தடையும் இல்லை. கொத்தடிமைகளாக தன்னுடைய அதி காரத்துக்குள், கட்டுப்பாட்டுக்குள் பெண் களை வைத்திருந்து அவர்களை மீண்டும், மீண்டும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி இருப்பதால் 376(k) & (n) என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யவேண்டும். பாலியல் வன்முறையால் பாதிக்கப் பட்ட மற்ற 4 பெண்களின் புகார்கள் மீது தனித்தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட பெண்களின் புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது விசார ணை நடத்தி தண்டனை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. எனவே அந்த வழக்கில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
குற்றவாளிக்கு துணைபோகும் உள்ளூர் காவல்துறை
குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலினத்த வர் என்று வைத்துக் கொண்டால் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் பின் தங்கிய பழங்குடி இன பெண்கள் என்பதால், எஸ்சி&எஸ்டி ( SC &ST) சட்டப்படியான நிவாரணம் வழங்க துரிதமாக நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் நடந்த விஷயங் களை பார்க்கும் போது உள்ளூர் காவல்துறை, குற்றவாளிக்கு துணை போவது வெளிப்படையாக தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட படூர் பாலு ஆள்பலம் பணபலம், அரசியல் பலம் மிக்கவராக உள்ளார். உள்ளூர் காவல்துறை புலன் விசாரணை செய்ய அனுமதித்தால் வேண்டுமென்றே குறைபாடுள்ள விசார ணைகளை மேற்கொண்டு இறுதியில் நீதி மன்ற தீர்ப்பு குற்றவாளிக்கு ஆதரவாக வரும்படி செய்வதற்கு வாய்ப்புகள் அதிக மாக உள்ளன. எனவே வழக்கு புலன் விசா ரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும். பல்வேறு சட்டப் பிரிவுகளை விதிமுறைகளை மீறிய ஸ்தல காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த மேற்கண்ட விபரங்களை கேட்டறிந்து கோரிக்கைகளை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக உள்துறைச் செயலாளர் உறுதியளித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.