புதுதில்லி,ஏப்.22- தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறி வித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது சாலைப்பணி உள்பட சில பணிகளுக்காக மக்கள் நலப் பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டனர். ஆனால் அதிமுக ஆட்சி யில் ரத்து செய்யப்பட்டது. இத னால், 13,500 மக்கள் நலப்பணி யாளர்கள் வேலை இழந்தனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நலப் பணியாளர் வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து. கடந்த 3 மாதங்களில் 3 முறை உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைப்போல, நகர்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்படி மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் ரூ.7500 ஊதியத்துடன் மீண்டும் வேறு பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோ சனை மேற்கொண்டு வருவ தாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்கள் நலப்பணி யாளர்கள் வழக்கை 4 வாரங் களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்நிலையில், மக்கள் நலப்பணியாளர் வழக்கு ஏப்ரல் 22 வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ,மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கை விரிவாக விசாரிப்ப தற்காக வேறு அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் வழக்கு விசாரணை முடிவடைய மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.