சென்னை, ஆக.22- நோபிள் டெக் தொழிலாளர்கள் பிரச்சனையில் காவல்துறை அடக்கு முறைக்கு சிஐடியு கண்டனம் தெரிவித் துள்ளது. இது குறித்து மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூரில் அமைந்துள்ளது நோபிள் டெக் என்கிற உருக்குத் தொழிற்சாலை. இந்த ஆலை எந்த சட்டத்தையும் மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு விளை வித்து வருகிறது இதற்கு மாற்று ஏற்பாடுகளையும் செய்வதில்லை. வேலை நிலைமைகள் மிகவும் மோசமானதாக உள்ளது, விபத்துக்கள் தொடர் நிகழ்வுகள் உள்ளன. பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்த கொடுமையும் இங்கு நடந்தது. அரசின் தொழிற்சாலை ஆய்வுத்துறை இதற்கு நிர்வாகத்தின் அலட்சியமே பொறுப்பு என்று குற்றம் சாட்டியது. இதே அணுகுமுறை யில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்களையும் மீறுகிறார்கள். தொழிற்சங்கம் அமைத்ததை நிர்வாகம் ஏற்க முடியாது என்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து பழி வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பாய்லர் விபத்து நடந்த போது தொழிலாளர்கள் பீதியுடன் வெளியேறினார்கள். புகார் செய்தார் கள். இதற்காக நிர்வாகிகள் உட்பட 19 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்ட னர். ஊதிய உயர்விற்கான கோரிக் கையும் தொழிலாளர்துறை முன்பாக உள்ளது.
இது தொடர்பான எந்தப் பேச்சு வார்த்தையிலும் கலந்து கொள்ளா மலும் சுமுகமான தீர்விற்கு ஒத்துழைக் காமலும் நிர்வாகம் அடாவடித்தனம் செய்கிறது. தொழிலாளர் துறையின் அறிவுரைகளையும் ஏற்க மறுக்கின்றது. எனவே, தொழிற்சங்க உரிமைகள், ஊதிய உயர்வு, பணியிடப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு பழிவாங்கப்பட்டவர்க ளுக்கு மீண்டும் வேலை என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.22 அன்று ஆலை முன்பு போராட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மக்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திரண்டனர். காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் சில கிலோ மீட்டர்களுக்கு முன்பாகவே அனைத்து வழிகளையும் மறித்து யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. அந்தப் பகுதியே நூற்றுக் கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டு போர்க்களம் போல மாற்றப்பட்டது. 8 முனைகளில் தொழிலாளர்களும் ஊர் மக்களும் கைது செய்யப்பட்டனர். சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செய லாளரும் நோபிள் டெக் தொழிலாளர் சங்கத் தலைவருமான முத்துக்குமாரும் கைது செய்யப்பட்டார். இது மிக மோசமான அடக்குமுறையா கும். இதை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. தொழிற்தகராறில் போலீஸ் அடக்கு முறை தீர்வாகாது. உடனே அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். பொய் வழக்குகளைப் புனையக் கூடாது. தொழிலாளர் கோரிக்கைகளை முடித்து வைத்த தொழிலாளர் துறை முன்பு பேச்சு வார்த்தைக்கு நிர்வாகத்தை வரவைத்து அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.