சென்னை, ஆக.5- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, 3 நாள் பயண மாக, சனிக்கிழமையன்று தமிழ் நாடு வந்தார். தில்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் கர்நாடகா மாநிலம் மைசூர் விமான நிலையத்துக்கு வந்த முர்மு, அங்கிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்தை வந்தடைந்தார். இங்கு முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் முர்மு, யானைப் பாகன்களுடன் கலந்து ரையாடினார். தொடர்ந்து ‘ஆஸ்கர்’ வென்ற ‘எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன் - பெள்ளியைச் சந்தித்துப் பாராட்டினார். மாலை 5 மணிக்கு ஹெலி காப்டரில் மீண்டும் மைசூரூ புறப்பட்டு சென்ற முர்மு, அங்கி ருந்து விமானம் மூலம் இரவு 7 மணிக்கு சென்னை வந்தார். அவரை, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். அடுத்த இரண்டு நாட்கள், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்க ளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலை வர் முர்மு கலந்து கொள்கிறார்.