அடுத்த 3 நாட்களுக்கு பிரதமர் மோடியின் பொய்கள் கலந்த தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து மக்கள் விடுபட்டுள்ளார்கள். காரணம் மோடி மீண்டும் வெளிநாடு கிளம்பிவிட்டார். ஆனால் மே 2023 முதல் வன்முறையால் உருக்குலைந்து இருக்கும் மணிப்பூருக்குச் செல்ல ஏன் மோடி மறுக்கிறார்?
அரசியலமைப்பின்படி பதவியேற்று ஒரு மாநில முதல்வராக இருந்து கொண்டு வகுப்புவாத வன்முறைகளுக்கு இடம் கொடுக்கும் காவி வேட்டி கட்டிக் கொண்டு திரியும் ஆதித்யநாத் போன்றவர்களுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்? அவர்களை அலட்சியப்படுத்தி நல்ல அரசியலை முன்னெடுப்போம்.
ஒவ்வொரு மும்பைவாசிகளும் தெரிந்து கொள்ள வேண்டியது. அனைத்து உள்கட்டமைப்பு நெம்புகோல்களும் ஒவ்வொன்றாக அதானி என்ற தொழிலதிபர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மகாயுதி கூட்டணிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் அதானி குழுமம் மும்பை நகரத்தை தனது உறுதியான பிடியில் வைத்திருப்பதற்கான வாக்கு ஆகும்.
பல தசாப்தங்களாக பாஜக ஆட்சி செய்து வரும் முன்மாதிரி மாநிலமாக இருக்கும் குஜராத் மாநிலத்தில் மட்டும் எப்படி இவ்வளவு போதைப்பொருள் சரக்குகள் வருகின்றன. இந்த சந்தேகத்திற்கு விடை கொடுப்பது யார்?
குஜராத் மாநிலம் காந்தி நகரில் வெள்ளியன்று நள்ளிரவு ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 முதல் 3 வினாடி கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தால் பெரியளவு பாதிப்பு ஏற்படவில்லை.
மணிப்பூர்-அசாம் எல்லையில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக் கப்பட்டன. இந்த உடல்களில் ஒன்று சிசுவின் உடல் ஆகும். கைப்பற்றப்பட்ட உடல்கள் ஜிரிபாம் மாவட்டத் தில் காணாமல் போன 6 பேரின் உடல்களாக இருக்க லாம் என மணிப்பூர் போலீசார் கூறியுள்ளனர்.
ஆதித்யா பிர்லா குழுமம் நாட்டின் முக்கிய உற்பத்தி துறைகளில் சுமார் 20 பில்லியன் அமெ ரிக்க டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் மணிக்கொண்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் பொழுது சமையலறையில் இருந்து கேஸ் சிலிண்ட ரும் வெடித்தது. குடியிருப்பில் வசிப்பவர்கள் உடன டியாக அங்கிருந்து வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் அடுக்குமாடி குடி யிருப்பில் சுமார் ரூ.1 கோடி வரை சொத்துகள் சேதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன்-நைனிடால் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
பீகார் அரசின் மதுவிலக்கு கொள்கையால், சட்ட விரோத மதுபான வியாபாரம் மற்றும் பிற சட்ட விரோத பொருட்களை விற்பனை செய்து, அரசு அதி காரிகள் பெரும் தொகையை சம்பாதித்து வருகின்ற னர் என பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டி யுள்ளது.
பண்டிகை காலத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் பிரீமியம் கோச்சில் டிக்கெட் இல்லாமல் 21 பேர் பயணம் செய்ய அனுமதித்த டிடிஇ மீது விசாரணை நடத்தப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
கழுதைப் பண்ணை வைத்தால் பெரும்லாபம் அடையலாம் என ஏமாற்றி ஹைதராபாத்தில் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக சென்னை யை சேர்ந்த போலி கழுதைப் பண்ணை நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில் திரு மணம் செய்வதாக உறுதியளித்து 16 வயது சிறுமி இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார்.