சென்னை, செப். 13- ஆயுத பூசை, தீபாவளிக்கு ஆவின் இனிப்பு, கார வகைகள் 10 ஆயிரம் இடங்களில் விற்பனை செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பாலை பதப்படுத்தி ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக் கெட்டுகளில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலம், தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூசை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிட் டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜூ பிஸ்தா ரோல், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்சர் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொது மக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங் கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 விழுக்காடு அதிகரித்தது. இதே போல இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பண்டிகை நெருங்கும் நிலையில் இனிப்பு, கார வகை கள் மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறு வனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றனர். புதிய வகை இனிப்பு வகை களை தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்ய வில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை அதிகரிக்க வும், ஏற்கெனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோ சனை வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.