தெஹ்ரான்/ரியாத்,அக்.23- ஈரான், சவூதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளின் கடற்படையும் செங்கடல் பகுதியில் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டுப் பயிற்சி குறித்தான செய்திகளை ஈரான் கடற்படையின் ரியர் அட்மிரல் ஷாஹ்ராம் இரானி செவ்வாய்க்கிழமையன்று உறுதிப்படுத்தியுள்ளார். வரும் நாட்களில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் போர்ப் பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆலோ சனைகளை நடத்துவார்கள் என்று ஷாஹ்ராம் தெரி வித்துள்ளார். மேலும் இந்த பயிற்சி கடல் பாதுகாப்பை மேம்படுத்து தல், கடல் சூழல் தொடர்பான பிரச்சனைகளை கண்கா ணித்தல், இயற்கைப் பேரழிவுகளின் போது மனிதாபிமான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது, நாடுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது என குறிப்பிட்டுள்ளார். சீனா சமரச முயற்சி ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வந்தது. இந்த பிரச்ச னையை 2023 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை மூலம் சீனா தீர்த்து வைத்தது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கியமான இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட இந்த அமைதி முக்கிய முன்னெ டுப்பாக பார்க்கப்பட்டது. குறிப்பாக இஸ்ரேல்-அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிரான சீனாவின் முக்கிய நகர்வாக என கூறப்பட்டது. ஈரான் தற்காப்பிற்காக அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பிறகு எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தும் என்ற பதற்றமான சூழல் நிலவி வரும் நிலை யில் ஈரான்- சவூதி கூட்டுப் பயிற்சி அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ள சவூதியில் 10 அமெரிக்க ராணுவத்தலங்கள் உள்ளன. இந்நிலையில் ஈரானுடன் சவூதி கைகோர்த்து போர்ப் பயிற்சி செய்ய உள்ள தகவல் அமெரிக்காவிற்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை அமைத்து ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் - அமெரிக்காவிற்கு எச்ச ரிக்கை விடும் வகையில், ஈரான் சவூதியுடன் கூட்டுப்படை போர்ப் பயிற்சி நடத்த உள்ளதாக கருதப்படுகிறது.