states

img

“வனப்பகுதிகளில் கார்ப்பரேட் சுரண்டலுக்கே புலிகள் காப்பகம்” - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

வனவிலங்குகள் பாதுகாப்பு என்ற பெயரில் ஆதிவாசி களை வெளியேற்றி, வன வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கவே ஒன்றிய அரசு திட்டமிடுவதாக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம் கடுமையாக விமர்சித்தார். ஈரோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக திறப்பு விழாவில் பேசிய அவர், பின்வரும் முக்கிய விமர்சனங்களை முன்வைத்தார்: u சத்தியமங்கலம் பகுதியை புலிகள் சரணாலயமாக அறிவித்து, அங்குள்ள மக்களை வெளியேற்ற நிர்ணயித்துள்ள காலக்கெடு கொடூரமானது. u 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோடு மலைவாழ் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி போராடியும், எந்த முன்னேற்றமும் இல்லை. u    புலிகள் பாதுகாப்பு என்ற போர்வையில் வன வளங்களையும் கனிம வளங்களை யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதே ஒன்றிய அரசின் நோக்கம்.       ஈஷா விவகாரம் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார். u யானைகள் வழித்தடங்களை மறித்து ஈஷா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. u காவல்துறை விசாரணையை தடுக்க உச்சநீதிமன்றத்தை பயன்படுத்துவது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. u ஈஷா மையத்தின் மீதான அனைத்து புகார்களையும் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். மேலும், சிப்காட் தொழிற்பேட்டையில் பட்டியல் சாதியினருக்கான கட்டிடங்கள் 30 ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்படாமல் சீரழிந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டி னார். இந்த கட்டிடங்களை உடனடியாக புதுப்பித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.