சென்னை, ஜூன் 18- பாஜக- ஆர்.எஸ்.எஸ்-அமைப்பின் வெறுப்பு அரசியலைக் கண்டித்தும் பாஜக அரசின் பின் துணையுடன் சிறுபான்மை மக்கள் மீது தொடரும் தாக்குதல்களைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தில் ஆறு மையங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழா வைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்டத்தின் விழுமியங்க ளைப் பற்றி கவலைப்படாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கங்களையும், தனது குறு கிய அரசியல் லாபங்களையும் கருத்தில் கொண்டு தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருவதும், அவர்களது வாழ்வுரிமை மற்றும் வழிபாட்டு உரிமை மீது கடும் தாக்குதல்களை நடத்துவதும் தொடர்கிறது.
குடியுரிமை திருத்தச்சட்டம், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து அம்மாநில அந்தஸ்தையே பறித்து துண்டாடியது. பொது சிவில் சட்டம் கொண்டு வரு வதற்கான ஆயத்தங்களைச் செய்வது போன்ற சிறுபான்மை மக்களைக் குறிப்பாக இஸ்லா மியர்களை தனிமைப்படுத்தி, தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காஷ்மீர் மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோத செயல் கள் காரணமாக அம்மாநிலத்தில் குறைந்திருந்த தீவிரவாத செயல்கள் மீண்டும் தலையெடுத்து, காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்ட கண்டனத் துக்குரிய செயல்கள் நடந்தேறியுள்ளன. அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் உட்பட வெறுப்பு அர சியலைத் தூண்டும் வகையில் பொதுவெளியில் பேசுவதும், சங்பரிவாரத்தைச் சார்ந்த வன்முறை யாளர்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடந்தும் ஒன்றிய பாஜக அரசும், மாநில பாஜக அரசு களும் இத்தகைய வெறுப்பு அரசியலை ஊக்கப் படுத்தும் வகையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
மிருகத்தனமான தாக்குதல்-கண்துடைப்பு நடவடிக்கை
சமீபத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாமியர்கள் பெருமதிப்பில் வைத்திருக்கும் முகம்மது நபி குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறியது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய அவதூறுப் பேச்சுக்கு பாஜகவின் மேலிடத் தலைமை ஊக்கப்படுத்தும் வகையிலேயே நடந்து கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அரேபிய நாடுகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே அவதூறு பேசிய வர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது. ஆனால் பாஜக அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அதன்பின்னர் தில்லி காவல்துறை கண்துடைப்பாக அவதூறு பேசியவர்கள் மீதும், ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்தது. அவதூறு பேசிய பாஜக வினரைக் கைது செய்ய வேண்டுமென கோரி ஆர்ப்பாட்டங்கள் தொடரவே கல்லெறி சம்பவங் கள், தடியடி பிரயோகம் உட்பட பல சம்பவங்கள் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநி லங்களில் நடைபெற்றன. இதையொட்டி உத்தரப் பிரதேச பாஜக அரசு பிரக்கியராஜ் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரைக் கைது செய்து காவலில் வைத்ததோடு கைது செய்யப்பட்ட சில இளைஞர்களைக் காவல்நிலையத்தில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கியதும், அதை வீடியோ எடுத்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சமூக ஊட கங்களில் பரவ விட்டதும் அவர்களது வன்மத் தைக் காட்டுகிறது. பாஜக அரசு அத்துடன் நில்லா மல் சிலரின் வீடுகளை காவல்துறையினரின் உதவியோடு புல்டோசர் வைத்து தரை மட்ட மாக்கியதும் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள் ளாக்கியுள்ளது.
பாஜக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான, சட்டத்திற்கு புறம்பான இத்தகைய மனிதத் தன்மையற்ற தாக்குதல்களைக் கண்டித்தும், வெறுப்பு அரசியலைக் கைவிட்டு மத நல்லிணக்கம், மதச் சார்பின்மையை பேணவும் வலியுறுத்தி தமிழ கத்தில் சென்னை, வேலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய நக ரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத் தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும், வேலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணனும், நெல்லையில் பி.சம்பத், எஸ். நூர்முகம்மது ஆகியோரும், திண்டுக்கல்லில் அ.சவுந்தரராசன், கே. பாலபாரதி ஆகியோரும், நாகப்பட்டினத்தில் பெ.சண்முகம், பி.செல்வ சிங் ஆகியோரும், திருப்பூரில் ஜி.சுகுமாறன், பி.ஆர். நடராஜன் எம்.பி. ஆகியோரும் பங்கேற்கி றார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பிட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.