states

ரூ. 78 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு

சென்னை, ஜூன் 14- காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறந்து விடப்படு வது வழக்கம். ஆனால், இந்த  ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர்  இல்லாததால், டெல்டா சாகுபடிக்கு நீர் திறந்துவிட கால தாமதம் ஏற்பட்டுள்ளது.  எனினும், குறுவை சாகுபடியாளர்கள் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டும் டெல்டா விவசாயிகளை காக்கும் வித மாக ரூ.78.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி 1 லட்சம் ஏக்கர் பரப்பள விற்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விதை கள் மானிய விலையிலும், நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம், 1  லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் வழங்கப் பட உள்ளது. நெல் நுண்ணூட்டக் கலவை, சுமார் 7 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிற்கு 50  சதவிகித மானியத்திலும், துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில், துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, ஏக்கருக்கு ரூ. 250 வீதம், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கும், ஜிப்சம் பயன்படுத்துவதற்கு ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது. இதேபோல பயறு வகைகள் சாகு படிக்கும் 50 சதவிகித மானியத்தில் விதை கள், உரம், நுண்ணூட்டச் சத்து வழங்கப் படுகிறது. மேலும், விசை உழுவை, களை யெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திரக் கலப்பை, சுழல் கலப்பை, சாகுபடி கலப்பை, பலதானிய பிரித்தெடுக்கும் கருவி, ஆளில்லா வானூர்தி கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் போன்ற 442 கருவி களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. 100 நாள் வேலைக்கு ரூ.24 கோடி இவை தவிர டெல்டா மாவட்டங்களில் வேளாண் பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பை ஈடு செய்யும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயனடைவதை அதிகாரிகள் உறுதி செய்க!

பருவமழை தாமதமாகி வருவதால் டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாது என டெல்டா குறுவை சாகுபடிச் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளோம், இத்திட்டத்தின் பயன் முறையாக சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.