states

மாநிலங்களவை எம்.பி தேர்தல்: முதல் நாள் மனு தாக்கல் இல்லை

சென்னை, மே 24 - தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாயன்று (மே24) தொடங்கியது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாயன்று(மே24) தொடங்கியது. இது குறித்து சட்டப்பேரவை செயலாள ரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர் அல்லது அவருடைய பெயரை முன்மொழிபவர்களில் எவரே னும் ஒருவர், முனைவர் கி. சீனிவாசன், தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம் அல்லது கே.ரமேஷ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் துணைச் செயலாளர், சட்ட மன்றப் பேரவைச் செயலகம் ஆகியோரி டம் சட்டமன்றப் பேரவைச் செயலகத்தி லுள்ள அலுவலகத்தில் (முறையே வங்கி விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களான மே 28, 29 நீங்கலாக) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள்ளாக மே 31 ஆம்  தேதிக்குள் வேட்பு மனுக்களை அளிக்க லாம். வேட்பு மனுக்கள், சட்டமன்றப் பேரவைச் செயலக செயலாளர் அலுவல கத்தில் 1.6.2022 ஆம் தேதி காலை 11  மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படும்.

வேட்பாளர் விலகலுக்கான அறிவிப்பை, வேட்பாளர் அல்லது  அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர் அல்லது வேட்பாளரால் எழுத்து  மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அவரது தேர்தல் முகவர், தேர்தல் நடத்தும் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் 3.6.2022 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அளிக்கலாம். தேர்தலில் போட்டி இருப்பின், 10.6.2022 ஆம் நாளன்று காலை 9  மணி முதல் மாலை 4 மணி வரையில், தலைமைச் செயலகப் பிரதானக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவை குழுக்கள் கூடும் அறையில் வாக்குப் பதிவு நடைபெறும். திமுக கூட்டணி 4 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக 3 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் அதிமுக 2 இடத்திலும் வெற்றிபெற வாய்ப்புள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக் கப்பட்டுள்ளனர். அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. இந்நிலையில், முதல் நாள் யாரும்  வேட்புமனுதாக்கல் செய்யவில்லை.