states

போலி என்சிசி முகாம் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை

சென்னை,நவ.20- கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தேவை யில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தி குப்பம் அருகே கிங்ஸ்லி தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படையின் (என்சிசி) முகாம்   பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் அங்குள்ள கலையரங்கில் தங்கி பயிற்சி பெற்று  வந்தனர்.  இந்த முகாமில் பங்கேற்ற மாணவியை பயிற்சியாளர் சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி முதல்வர் சதீஷ்குமாரிடம் புகார் தெரிவித்த போது அவர், இதை யாரிடமும் தெரி விக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். இதனையடுத்து மாணவி என்சிசி முகாமில் நடந்த சம்பவம் தொடர்பாக தனது தாயாரிடம் தெரி விக்கவே இது வெளியே தெரிய வந்தது. மாணவி அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ் குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட என்சிசி முகாம் போலியானது என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் சூரியபிர காசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் முன்பு நடை பெற்றது.   அப்போது போலி என்சிசி முகாம் நடத்திய பள்ளி மட்டுமின்றி வேறு 2 பள்ளிகளையும் சேர்த்து விசார ணை நடத்த அதிகாரியை நியமிக்க இருப்பதாக அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.