states

தீக்கதிர் விரைவு செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு வெளிநடப்பு

தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டி.எம்.சி. நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு கோரியிருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு கோரிக்கை யை ஏற்கபடவில்லை. இதனால் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தகவல் தெரிவித்துள்ளார். 

என்எல்சி நிர்வாகம் விரைவில் பதிலளிக்க உத்தரவு

என்எல்சி நிர்வாகம் - தொழிலாளர்கள் இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நிய மனம் குறித்து ஒன்றிய அரசு, என்எல்சி நிர்வாகம் வரும் 22-க்குள் பதிலளிக்க வேண்டும். நீதிமன்றம் என் எல்சி-க்கு மட்டுமல்ல, தொழி லாளர்களுக்கும்தான். நிலக்கரி தீர்ந்து விட்டால் நிலம் கொடுத்த தொழிலா ளர் குடும்பங்கள் மீண்டும் விவசாயத்திற்கு திரும்ப தயங்க மாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.ஜி. முருகன் மீது 112 பக்க குற்றப்பத்திரிகை

2017-18 இடைப்பட்ட கால த்தில் லஞ்ச ஒழிப்புத்துறை யில் பணியாற்றியபோது ஐ.ஜி. முருகன் பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரில் சிபிசிஐடி சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் 112 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஐ.ஜி. முருக னுக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு, 20 சாட்சியங்கள் விசா ரிக்கப்பட்டு குற்றப்பத்திரி கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு மோசமான பிரதமரை பார்த்தது இல்லை

“காங்கிரஸ் கட்சி ஆட்சி யின்போது இருந்த பிரத மர்கள், பாஜகவின் வாஜ் பாய் மற்றும் மற்ற பிரதமர் களான தேவகவுடா உள்ளிட் டோர் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமர் (மோடி) இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்த்ததே கிடையாது” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறி னார்.

இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் கைது

கோயமுத்தூரில் பழைய இரும்பு குடோனின் பூட்டை உடைத்து ரூ.26.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், இந்து மக்கள் கட்சி மாநில இளை ஞர் அமைப்பாளர் காலனி பிரபு உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹைதராபாத்தில் ரூ.2,000 கள்ள நோட்டு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ.2,000 கள்ள நோட்டுகளை புழக்க த்தில் விட முயன்ற ஜாஹீத் கான், ரைசுதூன், முகமது அன்வர், முகமது முனீர் அலி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல் லாது என அறிவிக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும் என்பதை அறியாத  மாற்றுவது கள்ள நோட்டு கும்பல் பஜார் கடைகளில் மாற்றி சிக்கிக்கொண்டது.

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்ந்தது

சென்னை, ஆக.11- தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30 விழுக்காடு உயர்ந்துள்ளது. சனிக்கிழமை முதல் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல  பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்ற னர். இதனால், பேருந்துகளில் கூட்டம்  அலைமோதுகிறது. சிறப்பு பேருந்து களையும் தமிழ்நாடு அரசு இயக்கு கிறது. பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள  நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்து களில் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை - கன்னியாகுமரி ஏசி பேருந்து ரூ.3,000, சாதாரண பேருந்து ரூ.1,400, சென்னை - நெல்லை ஏசி   ரூ.2,450, சாதாரணம் ரூ.1,400, சென்னை  - மதுரை ஏசி  ரூ. 2,000, சாதாரணம் ரூ. 1,200  வரை என டிக்கெட் கட்டணம் உயர்த்தி  வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணி கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொழுப்பு குறைந்த  பால்: ஆவின் அறிமுகம்

சென்னை, ஆக.11- மஞ்சள் நிற பாக்கெட்டில், கொழுப்பு குறைந்த பால் விற்பனைக்கு, ஆவின் தயாராகி வருகிறது. ஆவின் வாயிலாக, சிவப்பு நிற பால்  பாக்கெட் 500 மி.லி., 34 ரூபாய்க்கு, ஆரஞ்சு 30, பச்சை 22, நீளம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சில மாதங்களாக, ஊதா நிற பாக்கெட்டில் பசும்பால், 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் வருமானத்தை அதிகரிக்க, மிக குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் தயாரித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களில் விற்பனை செய்ய, ஆவின் முடிவெடுத்து உள்ளது. மஞ்சள் நிற பாக்கெட்டில் தரப்பட உள்ள இந்த பால், 500 மி.லி., 19 ரூபாய்க்கு கிடைக்கும்.  இது சென்னை மக்களின் தேவைக்காக, விரைவில் விற்பனைக்கு வருகிறது.

குமரியில் பிடிபட்ட புலி வண்டலூர் பூங்காவில் அடைப்பு

சென்னை, ஆக.11- குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழி லாளர்கள் குடியிருப்பு, மல்லன் முத்தன்கரை, மோதிரமலை மூக்கறைக் கல், வட்டப்பாறை புறத்திமலை, பத்து காணி ஒருநூறாம்வயல் பழங்குடி குடியிருப்புகளில் கடந்த 1 மாத காலத்திற்கு மேலாக ஒரு புலி ஆடு, மாடு களை அடித்து அட்டகாசத்தில் ஈடு பட்டு வந்தது. இதையடுத்து வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சி எடுத்து பத்து காணி கல்லறை வயல் என்ற இடத்தில்  வைத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அது பலத்த பாதுகாப்புடன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொண்டு வந்து சேர்த்தனர். பூங்காவில் உள்ள காட்சி அறையில் அந்த புலி அடைக்கப்பட்டுள்ளது. தற்போது அது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை குறைந்தது

சென்னை, ஆக.11- தங்கத்தின் விலை கடந்த மார்ச்  மாத தொடக்கத்தில் இருந்து உயர்வதும்,  குறைவதுமாக இருந்து வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆப ரணத் தங்கத்தின் விலை வெள்ளி யன்று (ஆக.11) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.5,485க்கு விற்கப்பட்டு வருகிறது.

 மாதிரி பாடத்திட்டம்: தன்னாட்சி கல்லூரி விருப்பத்திற்கு விட்ட அரசு 

சென்னை, ஆக.11- மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநி லத்திலுள்ள 90 விழுக்காடு அரசுஉயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக் கேற்ப சில மாற்றங்களுடன் மாதிரிப் பாடத்திட்டங் களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்நிலையில், மாதிரிப் பாடத்திட்டத்தின் நோக்கம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர்  க. பொன்முடி தலைமையில்  சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த புதிய  மாதிரி பாடத் திட்டம் 70 விழுக்காடு  தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. சில தன்னாட்சி கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாக வும், இந்த மாதிரி பாடத்திட்டத்தினை நடை முறைப்படுத்துவதால்  கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உயர்கல்வித் துறை சார்பில் பரிசீலிக்கப்பட்டன. அதன்படி தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தினை தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.