states

img

நேபாள நிதியமைச்சர் நீக்கம்

காத்மண்டு, ஜூலை 7- நேபாளத்தின் நிதியமைச்சர் ஜனார்த்தன் சர்மாவைத் தனது பொறுப்பிலிருந்து விலகுமாறு அந்நா ட்டின் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆணையிட்டார். இதன்படி, ஜனார்த்தன் சர்மா தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ஆனால் அவர் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்று விட்டார் என்று கூறப்படு கிறது. தனக்கு வேண்டிய பலரை, எந்தவித நிதித்துறை அனுபவமும் இல்லாதவர்களை, நிதித்துறையில் முக்கியமான பொறுப்பு களில் நியமித்தார் என்று அவர் மீது குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. பெரும் பணக்காரக் குழுமங்கள் சிலவற்றிற்கு பலனளிக்கும் வகையில் வரிச்சலுகைகளை அளித்துள் ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜனார்த்தன் சர்மா, மக்கள் மீது சுமையை ஏற்றாமல் இருக்க முயற்சித்தேன். அதனால் என்னை வெளியேற்றுகிறார்கள் என்று கூறியுள்ளார்.