கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வை நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தேர்வு முதல்முறையாக கணினிவழி தேர்வாக நடத்தப்படுகிறது.
2030-ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு களை 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சாலைப்போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறி யுள்ளார்.
கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லப் பாகிற்கு 50 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு விதித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இரு தரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங் கள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் குஜராத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து விமர்சித்தது தொடர்பான தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) கொண்டுவந்துள்ளது. சுங்கக் கட்டண வசூல் முறையை எளிதாக்க இந்த விதி முறை கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் வங்கதேச கிரிக் கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டாண்டு கள் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரி யம் (ஐசிசி).
இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொடிய நிபா வைரசுக்கு முதன்முதலில் தடுப்பூசி பரிசோத னையை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்க லைக்கழக விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘சனா தனம்’ குறித்து பேசியது தொடர்பாக பிப்ரவரி 13 அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாட்னா உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி சரிகா வஹாலியாஸ் உத்தரவிட்டார்.