சென்னை, நவ.8- தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை இயல்பாகத்தான் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்தார். சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியை முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில், இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் மூலம் எதிர்காலத்தில் பல விஞ்ஞானிகளை உருவாக்க முடியும். பருவமழை சராசரியாக 40 சென்டிமீட்டர் பெய்யும். ஆனால், இது வரை 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை இயல்பாக இருக்கும்.வானிலையை பொறுத்த அளவில் 10 நாட்களை கொண்டு தான் கணிக்க முடியும். தற்போது புள்ளிகள் அடிப்படையில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.