states

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் : மோடி அரசுக்குத் தேவை அரசியல் நேர்மை!

மோடி கூட்டணி அர சாங்கத்திற்கு மிகப்பெரும் சவாலை ஏற்படுத்துவது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான். வேலை தேடும் இளை ஞர்களின் எண்ணிக்கை நாள்தோ றும் அதிகரிக்கிறது. அதற்கு மாறாக தொழில்நுட்பம் குறைவான பணியாளர்களே போதும் என்ற நிலையை பொருளா தாரத்தில் புகுத்துகிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர் எதிர் சூழல். இந்த நிலையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவை அரசியல் விருப்பம் மட்டுமே. மொத்தம் உள்ள நிறுவனங்க ளில் 21சதவீதம் தான் தொழில் முனைவோரின் நடவடிக்கைக ளுக்காக இணையதளத்தை பயன் படுத்துகின்றன என்று இணைக் கப்படாத நிறுவனங்களின் வரு டாந்திர கணக்கெடுப்பு( Annual Survey of Unincorporated Sector Enterprises) ஆய்வுகள் கூறு கின்றன. 2021 -22ஆம் ஆண்டின் 9.8 கோடி தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபர் 23 செப்டம்பர் வரை வேளாண்மை சாராத பொருளாதார வேலை வாய்ப்புகளில் சுமார் 11 கோடி பேர் தொழிலாளர்கள் பணிபுரிந்த னர் என  இந்த  ஆண்டின் சர்வ தேச தொழிலாளர் அமைப்பு (ILO)அறிக்கை விவரம் அளித் துள்ளது. தொழிலாளர்கள் நிலை தேக்கம் இந்தியாவில் உற்பத்தித் துறை  வேலைவாய்ப்புகள் 12  முதல் 14 சதவீதம்  தேக்கம் அடைந்துள்ளது. பெருந்தொற்றுக்குப் பிறகு விவசாயத்திலிருந்து விவசாயம் சாராத வேலைகளுக்கு அவர்கள் மெதுவாக இடம் பெயர்ந்தனர் என்று ஐஎல்ஓ-வின் இந்திய வேலை வாய்ப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

சிட்டி குரூப்பின் கவலை

தற்போதைய வேலைவாய்ப்பு கள் உருவாகும் வேகம் எதிர்கா லத் தேவைகளை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை என்றும் சிட்டி குரூப் (City Group) கவலை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த வேலை வாய்ப்புகளை வழங்கு வதில் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறை 45.67 சதவீதம் பங்களிக்கிறது. அதற்கு அடுத்த படியாக வர்த்தகத்துறை 35.61 சதவீதம் உற்பத்தி துறை 27.9 சதவீதம் பங்களிக்கிறது என கால முறை தொழிலாளர் ஆய்வுகள் (Periodic Labour Force Survey) குறிப்பிட்டுள்ளன. வெற்று வாணவேடிக்கை மூலமும் மாயாஜாலங்கள் மூலமும் மோடி கூட்டணி அரசு இவற்றிற்கு தீர்வு காண முடியாது.ரோபோ வரிவிதிப்பு (Robo Tax) விதித்து பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண் டும் என ஒன்றிய அரசிடம் சுதேசி ஜாக்ரான் மஞ்ச் கோரிக்கை வைத்துள்ளது. நீண்ட காலமாக இந்திய தொழிலாளர் மாநாட்டை கூட்டவில்லை. அதை உடனே அழைக்க வேண்டும் என தொழிற்சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன. தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொழிற்சங்கங்களை அழைத்து பேசி உள்ளார் என்பது ஒரு நல்ல அம்சம். ஆனால் வேலை இழப்பை தடுக்கவும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வலுவான பரிந்துரைகளை அவர் முன்வைக்க வேண்டும்.

உலக அனுபவம்

தொழில்நுட்ப முன்னேற்றங் கள் மக்களின் பணிச்சுமையை எளிதாக்க வேண்டும். அவர்க ளின் வாழ்வாதாரங்களில் இடை யூறுகளை ஏற்படுத்தக் கூடாது. வேளாண் உற்பத்தியை தொழில் மயமாக்கவும் அதில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்றவாறு பொது மற்றும் கூட்டு றவுத் துறையில் அரசாங்கம் முத லீட்டை அதிகரிக்க வேண்டும். தனியார் மற்றும் பொதுத்துறை கள், தொழிற்சங்கங்கள்  மற்றும் மாநில, தேசிய அரசியல் கட்சிக ளை கலந்தாலோசித்து வேலை வாய்ப்புகளை அளிக்கும் வளர்ச்சிக்கான முன்மாதிரியை வடிவமைக்க வேண்டும். வேலை வாய்ப்புகளற்ற பொரு ளாதார வளர்ச்சி, சமூகத்தில் கொந்தளிப்பையும் அவலங்க ளையும் தான் ஏற்படுத்தும் என்பதை உலக அனுபவங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மோடி கூட்டணி அரசிற்கு இது ஒன்றும் புரி யாதது அல்ல. தேவை ஒன்று தான்! மக்கள் நல  நடவடிக்கை எடுப்ப தற்கான  அரசியல் நேர்மை மட்டும் தான். தி இந்து தலையங்கம் (18/7/24),  தமிழில் : கடலூர் சுகுமாரன்