“காவல்துறை செயல்பாடுகளில் மாற்றம் தேவை”; “மரண தண்டனை தீர்வல்ல”
சென்னை, ஜன.12- தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்க ளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற் றுள்ளது. அதேநேரம், சட்டத் திருத்தங்களில் உலக நாடுகளின் அனுபவங்களையும், சமூக செயல் பாட்டாளர்களின் கருத்துக்களையும் கணக்கில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள் ளது. காவல்துறை செயல்பாடு மோசம் சட்டங்களை செயல்படுத்துவ தில் காவல்துறையின் பங்கு குறித்து சங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. “பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளில் காவல்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக உள் ளது. வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்னரும், தண்டனை பெற்றுத் தரு வதில் கடும் அலட்சியம் காட்டப்படு கிறது,” என சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.வாலாண்டினா, மாநில பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். முக்கிய பரிந்துரைகள் H ஏற்கனவே பதிவான வழக்கு கள், தண்டனைகள் குறித்து அரசு விரிவான ஆய்வு நடத்த வேண்டும் H புகார்கள், வழக்குப் பதிவுகள், தண்டனை விபரங்கள் குறித்த புள்ளிவிவரங்களை தொகுக்க வேண்டும்; H பெண்களை பாலியல் பொரு ளாக பார்க்கும் ஆணாதிக்க கண்ணோட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்; H பாடத்திட்டம், ஊடக சித்தரிப்பு களில் பண்பாட்டு ரீதியான மாற் றங்களை கொண்டுவர வேண்டும்; H பாலின சமத்துவக் கொள்கை களை அரசின் அனைத்து மட்டங் களிலும் செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மரண தண்டனை குறித்த கருத்து “தண்டனை அதிகரிப்பு அல்லது மரண தண்டனை மட்டுமே குற்றங் களைக் குறைக்காது என்பது பல நாடு களின் அனுபவம். மரண தண்ட னைக்குப் பதிலாக ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை வழங்குவதை பரிசீலிக்கலாம்” என சங்கம் தெரி வித்துள்ளது. தொடரும் போராட்டம் “பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். அரசின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதுடன், குறைபாடுகளை சுட்டிக்காட்டி செயல்படுவோம்,” என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உறுதியளித்துள்ளது.