states

74.1 சதவீத மக்கள் சத்தான உணவிற்கு வழியில்லாதவர்கள்

இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் 74.1  சதவீத மக்கள் ஆரோக்கிய மான உணவுப் பொருட்க ளை வாங்கமுடியாத நிலை யில் உள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கும் விலைவாசி உயர்விற்கும் சிறிதும் தொடர்பில்லாதது தான். விலைவாசி தொடர்ந்து அதி கரித்தால் இன்னும் அதிக மான மக்கள் ஆரோக்கிய மான உணவுகளை  சாப்பிட முடியாத நிலை ஏற்பட லாம் என ஐக்கிய நாடு களின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து (2023) தொடர்பான அறிக்கை ஒன்றை சமீபத்தில் செவ்வா யன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அம்சங்கள்: கொரோனா பாதிப்பு மற்றும் அதன் நெருக்க டியின் போது உணவு, தீவ னங்கள், எரிபொருள், உரங்கள் மற்றும் நிதி (“5Fs” நெருக்கடி) ஆகியவற்றில் இந்தியா கடும் நெருக்க டியைச் சந்தித்தது.  ஆண்களை விட அதிக மான பெண்கள் உணவுப் பற்றாக்குறைக்கு உள்ளாகி யுள்ளனர். ஐந்து வயதிற் குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளது. உடல் எடை குறைவு மற்றும் அதிக எடை, இனப் பெருக்க வயதுடைய பெண்களிடையே  ஏற் பட்டுள்ள இரத்தச் சோகை  ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இது உலக சுகா தார சபையின் உலகளாவிய ஊட்டச்சத்து இலக்கை மீறிவிட்டது. 

நாட்டின் மக்கள் தொகை யில் 16.6 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டு டன் உள்ளனர். 18.7 சத வீதம் குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கின்றனர். நேபாளத்திற்கு அடுத்தபடி யாக இந்தியாவில் குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பு அதிகமாக உள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 2.8 சதவீதக் குழந்தைகள் அதிக எடை கொண்டவர்களாக உள்ள னர். அதிக எடையும் உடல் நலத்திற்கு ஆபத்தானது தான். 31.7 சதவீதம் குழந் ்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். நாட்டின் 15 முதல் 49 வய துக்குட்பட்ட பெண்களில் 53 சதவீதம்  பேர் இரத்தச் சோகையால் பாதிக்கப் பட்டுள்ளனர், இது பெண்க ளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்பு அவர்களு க்குப் பிறக்கும் குழந்தை களையும் பாதிக்கிறது. நாட்டில் பெரியவர்களில் 1.6 சதவீதம் பேர் பருமனாக உள்ளனர்.  இதில் ஒரு நல்ல அம்சம் என்னவென்றால் 0-5 மாத குழந்தைகளுக்கு  தாய்ப் பால் கொடுப்பதில், இந்தியா 63.7 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது. உலகளாவிய பசிக் குறியீடு சமீபத்தில் இதே போன்ற புள்ளிவிபரங்க ளைக் கொடுத்தது. இது தவறானது என்று கூறி அந்தத் தரவுகளை ஒன்றிய பாஜக அரசு மறுத்துவிட்டது. ஆனால் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அதன் உறுப்பு நாடுகளுடன் நெருங்கியத் தொடர்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.