திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் (டிஎன்பிஎல்) சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்திரபாண்டியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் எம்.சின்னத்துரை, அப்துல் சமது, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, கருமாணிக்கம், கிரி, சதன் திருமலைக்குமார், கோவிந்தசாமி, டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆலை நிர்வாக இயக்குநர் டாக்டர் சீனிவாசன், தலைமை பொது மேலாளர் பானு பிரசாத், பொதுமேலாளார் (மனித வளம்) கலைச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.