states

தீக்கதிர் விரைவு செய்திகள்

செப். 13-இல் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும் ‘இந்தியா’ தலைவர்கள்

புதுதில்லி, செப். 8 - ‘இந்தியா’ கூட்டணியின் (I-N-D-I-A) ஒருங்கிணைப்புக் குழு முதல் கூட்டம் செப்டம்பர் 13 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் தில்லி வீட்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வ தற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணிக்கான தேர்தல் அறிக்கை, பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான தேதிகளை இறுதி செய்வது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவர் யாரும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த கூட்டத்திற்கு சரத் பவார் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், தில்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே தொகுதி பங்கீடு ஏற்பாடு தேவை என்றும், இதிலும் கூட பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் ஏற்கெனவே தொகுதி பங்கீடு பார்முலா உள்ளது என்று ‘இந்தியா’ கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிதாக 3 சேமிப்பு கிடங்குகள் திறப்பு

சென்னை, செப்.8- தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக் கோட்டை மாவட்டம் திருவப்பூர், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற் பேட்டை வளாகம், மதுரை திருமங்க லம் கப்பலூர் சிப்காட் தொழிற் பேட்டை ஆகிய இடங்களில் தலா 3,400  மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 புதிய சேமிப்புக் கிடங்கு ரூ.7 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்டது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெள்ளியன்று (செப்.8) காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், பல்லடம் மற்றும் குனிச்சி ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்படவுள்ள இரண்டு சேமிப்பு கிடங்குகள் கட்டுமான பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்  கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத் தில் உயிரிழந்த 53 பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப் படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாகவும் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணை களையும் அவர் வழங்கினார்.

தினேஷ் கார்த்திக் புகார்

சென்னை, செப்.8- கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் ஆவணம் தொலைந்து விட்ட தாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் இருந்து வீட்டின் அசல் ஆவணங்களை நகலெ டுக்க எடுத்துச் சென்றபோது ஆவணங் கள் தொலைந்ததாக புகார் அளித்துள் ளார். இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். முன்னதாக, நடிகர் ராம்கி கடந்த 5 ஆம் தேதி தேனாம்பேட்டை காவல்  நிலையத்தில் புகார் ஒன்றை அளித் திருந்தார். அதில் தனது வீட்டில் வைத்திருந்த வீட்டின் அசல் சொத்து ஆவணங்களை காணவில்லை என்றும், காணாமல் போன ஆவணங் கள் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் நடிகர் ராம்கி போலீசில் புகார்அளித் திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ராமேஸ்வரம், செப்.8- ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கடல் வழியாக  எளிதில் இலங்கை பகுதியை சென்றடையலாம் என்பதால்  இங்கிருந்து மஞ்சள், பீடி இலைகள், கஞ்சா உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சமீபத்தில் இலங்கையில் இருந்து கடத்தி  வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தல்காரர்கள்  காவலர்களை கண்டதும் கடலில் தூக்கி வீசிச் சென்ற சம்பவம்  நடந்தது. இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து,சோதனையில் ஈடுபட்டனர். இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள்  மறைத்து வைத்திருந்து பார்சலை பிரித்து சோதனையிட்ட போது விலை உயர்ந்த போதைப்பொருள் வைத்திருப்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடியாகும். இதுகுறித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.