சென்னை, பிப்.14- தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு அரசினர் தீர்மானங்களை ஆதரித்தும் வரவேற்றும் துரைமுருகன் (திமுக), அருண்மொழித்தேவன்(அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்.), சிந்தனை செல்வன் (விசிக), சதன் திருமலைக் குமார்(மதிமுக), எம்.சின்னதுரை (சிபிஎம்), டி.ராமச்சந்திரன் (சிபிஐ), ஜவாருல்லா (மமக), எல்.ஆர். ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன்(தவாக) ஆகியோர் பேசினர். அப்போது, காவி சித்தாந்தத்தையும் இந்து ராஷ்டிரா கொள்கையையும் புகுத்த நினைக்கும் பாசிச பாஜகவின் முயற்சி களை முறியடிக்க வேண்டும் என்றனர். பல்வேறு இனங்களையும் மொழி களையும் மதங்களையும் கொண்டது நமது நாடு. ஒரே குடையின் கீழ் உலகத் திற்கே எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டி ருக்கும் இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் சதி திட்டங்களை ஒரு போதும் அனுமதிக்காது என்று வலியுறுத்தினர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளையும் அதன் உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் ஒன்றிய பாஜக வின் சர்வாதிகாரத்தின் உச்சம்தான் ஒரே நாடு, ஒரே கொள்கை, ஒரே கடவுள், ஒரே மதம் என்ற ஒற்றை கலாச்சார நடவடிக்கையாகும். கடந்த 10 ஆண்டு கால மோடி அரசு அனைத்து வகையிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதை மறைத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக செய்யும் அனைத்து சூழ்ச்சிகளையும் ஒன்றுபட்டு முறியடிப்போம் என்றும் தெரிவித்தனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பின்னால் பாஜக உள்ளிட்ட சங்பரிவார்கள் மிகப்பெரிய கருத்தியல் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டின் கூட்டாட்சி உணர்வை அழிப்பதாக உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் தேர்தல் செலவினம் குறையும் என்பதில் துளியும் உண்மை யில்லை. இந்திய வரலாற்றின் சிறப்பு, மாண்பை ஒழிக்கும் வகையில் கொண்டு வரப்படுவது தான் ஒரே நாடு ஒரே தேர்தல். தொகுதி மறு வரையறை செய்து தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைப்பது ஜனநாயக விரோதம். அரசியல் நோக்கத்துக்காக, ஆட்சியை தக்க வைப்பதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படுகிறது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பிரதமரே நியமிப்பார் என்றால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது?. ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் ஒன்றிய பாஜக அரசிடமிருந்து ஜனநாய கத்தை பாதுகாக்க முதல்வர் எடுக்கும் இந்த முயற்சிக்கு அனைத்து கட்சிகளும் முழுமையான ஆதரவு கொடுக்கும் என்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி: சிபிஎம் எதிர்ப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னதுரை பேசியது வருமாறு:- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பாராட்டுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த திட்டத்திற்கு ஆரம்ப முதலே தனது கடுமையான எதிர்ப்பு களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி, இத்திட்டத் திற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவிடமும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். எனவே, இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஜனநாயகத் துக்கும், கூட்டாட்சித்தன்மைக்கும் பொருந் தாது. ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசு தான் அதிகாரத்தை கையில் வைத்திருக்க முடியும். சில தருணங்களில் ஆதரவளிக்கும் கட்சி திரும்பப் பெறும் நிலையில், அங்கு குடி யரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படுமா அல்லது பெரும்பான்மை இழந்த அர சாங்கமே அடுத்த தேர்தல் வரை அதிகாரத்தில் நீடிக்குமா என்ற கேள்விகள் எல்லாம் எழு கின்றன. அடுத்த தேர்தலுக்கான காலம் வரை காத்தி ருங்கள் என்று கூறி ஒன்றிய ஆளும் கட்சியே மாநிலத்தின் அதிகாரத்தை குடி யரசுத் தலைவர் ஆட்சி மூலம் தனது கைகளில் எடுத்துக் கொள்ளும் மிகப்பெரிய ஆபத்துக் கள் அடங்கியுள்ளன. “நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங் களில் ஒரு அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டால், ஆட்சியில் தொடர்வது என்பது சட்டவிரோதமானது. அதே போல, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கி, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பெற்றிருப் பதற்கான மக்களின் உரிமையை மறுப்பது என்பது ஜனநாயக விரோதமானது” ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் செலவினங்களை குறைப்பதற்காக முன்வைக் கப்படுகிறது என்ற ஒன்றிய அரசின் வாதம் நிராகரிக்கப்பட வேண்டியது ஆகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.