புதுக்கோட்டை, நவ.20 - ஒன்றிய அரசின் சட்டங்களை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில், “கள்ளக் குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் சம்ப வத்தில், சிபிசிஐடி போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டிருப்பது, ஒன்றிய, மாநில அரசு களுக்கு இடையே நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும். இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது பற்றி முதல்வர் உரிய முடிவை எடுப்பார். சிபிஐ விசாரணை மீண்டும் முதலில் இருந்து தொடங்கப்படும் என்பதால், காலதாமதம் ஏற்படும். துரிதமான பலன் கிடைக்காது. உச்ச நீதிமன்றத் தில், சிபிசிஐடி விசாரணை சரி என்று எங்களால் நிரூபிக்க முடியும். தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரை ஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை எதிர்த்துநான் பேசியதற்காக ஆளுநர் என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி வி.பி.துரைசாமி கூறியிருக்கிறார். மூன்று குற்றவியல் சட்டங்கள் தேவையில்லை என்பதுதான் மாநில அரசின் நிலைப்பாடு. அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். சுதந்திர நாட்டில் ஒன்றிய அரசின் சட்டங்களை விமர்சிக்க அனை வருக்கும் உரிமை உள்ளது” என்றார்.