states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கடந்த வாரம் சந்தை மூலதனம் ரூ.2.09 லட்சம் கோடிக்கு மேல் சரிந்த நிலையில், ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளன. அதிக பட்சமாக ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.67, 722.33 கோடி சரிந்தது. டிசிஎஸ் ரூ.55,654.17 கோடியும், இன்போசிஸ் ரூ.21,250.8 கோடி என சரிவை எதிர்கொண்டன.

மகாராஷ்டிராவை தொட ர்ந்து மேற்குவங்க மாநில 12-ஆம் வகுப்பு “வாழ்க்கை அறிவியல்” தேர்வுத் தாளின் இரண்டு பக்கங்கள் தேர்வு (சனியன்று) தொடங்கிய 2:30 மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது தேர்வு நடந்து கொண்டிருக்கும் வேளையில் வாட்ஸ்அப் பில் வெளியாகியது. தேர்வு தொடங்கிய 2.5 மணி நேரத்திற்குப் பிறகு வினாத்தாளின் படங்கள் பரப்பப்பட்டால் என்ன பெரிய விஷயம் என மேற்கு வங்க தேர்வுத் துறை கவுன்சில் தலைவர் சிரஞ்சிப் பட்டாச்சார்யா அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே 2018-ஆம் ஆண்டு பழங்குடியின இளைஞர் மது அடித்துக்  கொல்லப்பட்ட வழக்கில் வரும் 30-ஆம் தேதி எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால், கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில்  மார்ச் 17-ஆம் தேதி ஆங்கில மொழிக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தில் அங்கீக ரிக்கப்படாத விருந்தினராக ஆசிரியர் காணப்பட்ட விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்களில்  3 பேர் கைது செய்யப்பட்டனர். 

கேரளாவில் சாலைப் பணிகளுக்காக வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி பதேஷுக்கு லாட்டரியில் ரூ.75 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.