மீரட், ஜூன் 7- விவசாயிகளின் ஒற்றுமையை குலைப்பதற்காக, ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஒழித்து கட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதாக ராகேஷ் திகாயத் குற்றம் சாட்டி யுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஜாங்கேதி கிராமத்தில் உள்ள தர்மேஸ்வரி பண்ணையில் பாரதிய கிசான் யூனியனின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையில், அந்த அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் மேலும் கூறியிருப்பதாவது: “கர்நாடகத்தில் என் மீதான மை வீச்சுத் தாக்குதல் ஒரு நன்கு திட்ட மிடப்பட்ட சதி. என்னையும், எனதுகுடும்பத்தையும், விவசாயிகள் சங்கத்தை யும் ஒழித்துக் கட்ட அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் இது ஒரு போதும் நடக்காது. மகாத்மா காந்தியை சதிகாரர் கள் சுட்டுக் கொன்றது போல், நாட் டுக்காகவும், நாட்டின் விவசாயிகளுக்காகவும் குரல் எழுப்புபவர்களை சுட்டுக்கொல்ல சதிகாரர் கள் இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.
எனக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால், நாட்டில் இன்குலாபி கொடியை உயர்த்த லட்சக்கணக்கான திகாயத்துகள் தயாராக உள்ளனர். பாரதிய கிசான் யூனியனின் ஒற்றுமையை சீர்குலைக்க ஒன்றிய அரசு கடுமையாக முயற்சி செய்கிறது. ஆனால் அவர்களின் நோக்கம் நிறை வேறாது.” இவ்வாறு ராகேஷ் திகாயத் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே 30 அன்று பெங்களூருவில் ராகேஷ் திகாயத் செய்தியா ளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அங்கு வந்த 3 பேர் மோடி, மோடி என முழக்கமிட்டவாறே ராகேஷ் திகாயத்தை திடீரென தாக்கினர். திகாயத் மீது கறுப்பு மையையும் வீசினர். இதனைக் குறிப்பிட்டே ராகேஷ் திகாயத் தன் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.