கேரள மாநிலம் பாலக்காடு மாவட் ்டம் தென்குருசி அருகே இளமந்தம் கொல்லத்தறை யில் அனிஷும் (25) அதே பகுதியைச் சேர்ந்த ஹரிதாவும் (22) காதலித்து திரு மணம் செய்தனர். பொ ருளாதார ஏற்றத் தாழ்வு மற்றும் வெவ் வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களது திருமணத்திற்கு ஹரிதாவின் குடும் பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் செய்துகொண்ட 88ஆவது நாளான 2020 டிசம்பர் 25 அன்று அனீஷ் கொலை செய்யப்பட்டார். இந்த ஆணவப் படுகொலை தொடர்பாக ஹரிதாவின் மாமா சுரேஷ் (49), தந்தை பிரபுகுமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை குற்றப்பிரிவு விசா ரித்து 75 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப் பித்தது. இவ்வழக்கு பாலக்காடு மாவட்ட முதல் வகுப்பு கூடுதல் அமர்வு நீதிமன் றத்தில் நடந்து வந்தது. நீதிபதி விநாயக ராவ் அக்.28 திங்களன்று தீர்ப்பு வழங்கி னார். இதில் குற்றம்சாட்டப்பட்ட இருவ ருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி ஹரி தாவுக்கு ரூ.50 ஆயிரத்தை குற்றவாளி கள் வழங்கவும் தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டது. நீதிமன்றத்தில் அனிஷின் மனைவி ஹரிதாவுடன், தந்தை ஆறுமுகன், தாய் ராதா, சகோதரர்கள் அனில், அருண் ஆகியோரும் ஆஜராகினர். கொடுவாயூர் மரியன்னை கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த 22 வயதான ஹரிதா, தற்போது அரசுப் பணிக்கான பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.