states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தலித்துகளை புறக்கணிக்கும் மோடி அரசு அதிருப்தியை வெளிப்படுத்திய  கர்நாடக பாஜக எம்.பி.

நடந்து முடிந்த 18ஆவது மக்கள வைத் தேர்தலில் கர்நாடக மாநிலம்  விஜயபுராவில் வெற்றி பெற்ற பாஜகவின் ரமேஷ் ஜிகஜினாகி 7ஆவது  முறையாக எம்.பி.,யானார். தொடர்ச்சி யாக 7 முறை மக்களவைக்கு தேர்வு செய்  யப்பட்டுள்ளதால் ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் ரமேஷ் இருந்துள்ளார். ஆனால் அவ ருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.  இதனால் அதிருப்தி அடைந்த ரமேஷ்  விஜயபுராவில் தனது எம்.பி., அலுவல கத்தை திறந்து வைத்த பொழுது நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்  காததால் வருத்தமில்லை. தென்னிந்தியா வில் இருந்து 7 முறை நாடாளுமன்றத் துக்கு தேர்வான ஒரே தலித் எம்.பி. நான்  தான். உயர்சாதி எம்.பி.க்களுக்கு கேபி னட் பதவி கொடுத்திருக்கிறார்கள். ஆனால்,  நான் தலித் என்பதால் பாஜக என்னை புறக்கணிக்கிறது. நாடாளுமன்றத்துக்கு 7 முறை தேர்வான எனக்கு ஏன் கேபி னட் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை?  தலித்துகளை மட்டும் பாஜக ஆதரிக்கா தது ஏன்? இதனால் எனது மனம் வலிக்கி றது. கர்நாடக பாஜகவில் சிலர், எனக்கு  எதிராகச் செயல்படுகின்றன” என அவர்  கூறினார்.

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கள் நடைபெறுவதற்கான சட்டம்  செல்லுபடியாகும் என உச்சநீதிமன்  றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, ஜல்லிக்  கட்டுக்கு தடை விதிக்கக் கோரி விலங்கு கள் நல அமைப்பான பீட்டா உச்சநீதிமன் றத்தில் ஓராண்டுக்கு முன்னர் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த சீராய்வு மனு இதுவரை விசாரணைக்கு  வராத நிலையில், சீராய்வு மனுவை விரை வாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் பீட்டா அமைப்பு புதனன்று மீண்டும் முறையீடு செய்தது. இந்த வழக்கு விவரங்களை மின் அஞ்சலில் அனுப்புமாறு பீட்டா அமைப்புக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தி யுள்ளார். ஆனால் எப்பொழுது விசார ணைக்கு வரும் என  தலைமை நீதிபதி  சந்திரசூட் வெளிப்படையாக அறிவிக்க வில்லை.

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி 66 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி 66 ஆக அதிகரிப்பு கள்ளக்குறிச்சி, ஜூலை 10- கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த  சுமார் 229 பேர் கடந்த ஜூன் 18 ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த னர். இவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 65 பேர்  உயிரிழந்தனர். 8 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தனர். இதில் சிவராமன் என்ப வர் சிகிச்சை பலனின்றி புதனன்று உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

கல்வராயன் மலை மக்களின் தற்போதைய நிலை என்ன?

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி சென்னை, ஜூலை 10- கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்ப வத்தை தொடர்ந்து கல்வராயன் மலைப் பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்  வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள் ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிர மணியம், நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதனன்று (ஜூலை10) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த விவ காரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “கல்வராயன் மலைப் பகுதி 1976-ல் தான்  இந்தியாவுடன் இணைந்திருக்கிறது. 1996-ல் தான் இந்த பகுதி மக்களுக்கு வாக்கு ரிமை கிடைத்திருக்கிறது. அங்கு சுமார் 95 சத விகித மக்கள் பழங்குடியின மக்கள் இருக்கி றார்கள். அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலை யில் இருக்கிறார்கள். மக்களின் வாக்கு களைப் பெற்ற பின் அவர்களுக்கு அடிப்படை  வசதிகள் உள்ளதா, இல்லையா என்பதை கவனிக்கவில்லை என்றால் அரசின் அரசி யலமைப்புக் கடமை என்ன என்ற கேள்வி எழுகிறது” என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் நீதி மன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் தமிழ்மணி, எவரேனும் அங்கு நேரில் சென்று ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.  இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில், “கல்வராயன் மலைப் பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன;  பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு அர சின் நலத்திட்டங்கள் அவர்களை சென்ற டைகிறதா- என்பது குறித்து ஆராய்ந்து, வரும் 24 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

சமூக நீதியைக் கட்டிக்காக்கும் இடத்தில் இந்தியா கூட்டணி இருக்கிறது

அமைச்சர்  எஸ்.ரகுபதி பேட்டி புதுக்கோட்டை, ஜூலை 9-  சமூக நீதியைக் கட்டிக் காக்கும் இடத்தில் இந்தியா கூட்டணிக்கட்சிகள் இருக் கின்றன என்று மாநில சட் டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை யன்று மாலை செய்தியாளர் களுக்கு அவர் அளித்த  பேட்டியில் கூறியிருப்பதா வது: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி போன்றோர் சொல்கிறார்கள். அவர்களின் ஆட்சிக்காலத்தில் என்ன  நடந்தது என்பதையெல்லாம் மறந்துவிட்டுப் பேசுகி றார்கள். பொள்ளாச்சி சம்ப வத்தில் யார் குற்றவாளி என் பதையே சொல்லவில்லை. திமுக ஆட்சியில் யாருக்  கும் பணிந்து போக வேண் டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சமூக நீதியைக் கட்டிக் காக்கும் இடத்தில் திமுக உள்ளிட்ட  இந்தியா கூட்டணிக் கட்சிகள் இருக்கி றோம். சமூக நீதியைப் பாது காப்பதில் யாருக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களை நாங்கள் விட்டுத்தர மாட்  டோம். அரசின் செயல்பாடு களை விமர்சிப்பதற்கு முழு உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது. என்ன குறை சொன்னா லும், அவர்களை நேரில் சந்  தித்து குற்றவாளிகளை நிச்ச யம் சட்டத்தின் முன் நிறுத்து வோம் என சொல்லிவிட்டு வருபவர்தான் முதல்வர் ஸ்டாலின். யாரையும் சந்திக்க அஞ்சுபவர்கள் அல்லர். குற்றங்களை இரும்புக்  கரம் கொண்டு ஒடுக்கு வோம். மாயாவதி சிபிஐ விசா ரணை கேட்பது அவரது கருத்து. பலரும் தமிழ்நாட் டின் காவல்துறை செயல்  பாடு சரியாக இருப்பதாக  நம்பிக்கை தெரிவித்திருக்கி றார்கள். இவ்வாறு அவர் கூறி னார்.

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கனகசபைக்குள் பக்தர்கள்

சிதம்பரம், ஜூலை 10- சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபையில் ஏறி நின்று சாமி தரிசனம் செய் வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அற நிலையத்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில், சிதம்பரம் நடராஜர்  கோவிலில் கனகசபைக்குள் நின்று பக்  தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர். புதன்கிழமை (ஜூலை 10) காலை முதல் கனகசபைக்குள் நின்று நட ராஜரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனு மதிக்கப்பட்டு வருகின்றனர். கனக சபைக்குள் தீட்சிதர்கள் மட்டுமே சென்று  வந்த நிலையில் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.