states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை காலை 3.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் உணரப்பட்டதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் (ISR) தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரி வித்தனர். 

“ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாத தாக்கு தல்கள் அதிகரித்து வருகிறது. தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை உடனடியாக சுட்டுக் கொல்லக் கூடாது.  அவர்களை உயிருடன் பிடித்து  விசாரணை நடத்த வேண்டும்” என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

தில்லியில் அக்டோபர் 15 முதல் 30ஆம் தேதி  வரை ரூ.447 கோடிக்கு மதுபானம் விற்பனை  நடைபெற்றுள்ளது.

தில்லியில் பொதுமக்கள் சொத்துக்களை எந்த  நிலப்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவு  செய்யலாம் என்ற திட்டம் அமலாக உள்ளது.  ஊழலை ஒழிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் இத்திட்டம் பலன் தரும் என செய்திகள் வெளி யாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் ஶ்ரீநகரில் சுற்றுலா பய ணிகள் கூடியிருந்த இடத்தில் பயங்கரவாதி கள் நடத்திய தாக்குதலில் 10 பேர் படுகாய மடைந்தனர். 

“ஜார்க்கண்ட் மாநில மக்களிடம் வாக்குகள் கேட்கும் முன்பு அம்மாநிலத்துக்கு கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கும் ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி ராயல்டி தாமதத்துக்கு பாஜக பதில் கூற வேண்டும்” என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

“மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பாஜக தலை மையிலான ஒன்றிய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு வாபஸ் பெறுவார்கள்” என தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார்.

“பாஜகவை தோற்கடிக்க தேவை மக்களின் ஆதரவு மட்டுமல்ல. தில்லி யில் நல்ல பணிகளையும் தொடர வேண்டும்” என  ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் அறி வுரை கூறியுள்ளார்.

கன்னட திரைப்பட இயக்குனர் குருபிரசாதி (52) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மதநாயக்கனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.