states

பத்திரிகையாளர்கள் போராட்டம் வெற்றி

சென்னை. மே 26 - ஜூனியர் விகடன் மீது பதிவு  செய்யப்பட்ட, வழக்கில் உரிய ஆதாரம் இல்லை என்று சென்னை மாநகர காவல்துறை ஆணை யர் அறிவித்துள்ளதை தமிழ்நாடு யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் (டி.யூ.ஜெ ) வரவேற்றுள்ளது. இதுகருத்து சுதந்திரத்தை பாதுகாக்க, ஒன்று பட்டு போராடிய பத்திரிகையாளர்களுக்கு கிடைத்த  வெற்றி என்று டி.யூ.ஜெ. மாநிலத் தலைவர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் ஜூ.வி. நிறுவனத்திடமோ குற்றம் சாட்டப்பட்ட எவரிடமும், எந்த விசாரணையும் நடத்தாமல்,  பொய் புகாரில், பத்திரிகையா ளர்களை கைது செய்ய எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை கண்டித்து செவ்வாயன்று (மே 24) பத்திரிகையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் வியாழனன்று சென்னை காவல்துறை ஆணை யர்,வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஜூனியர்விகடன், நிறுவனத் தின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விகடன் இயக்கு நர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு களுக்கு ஆதாரம் இல்லை என்பது தெரியவந்தது.எனவே அவர்க ளின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கிட, உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது ஒன்றுப்பட்டு போராடிய பத்திரிகையாளர்களுக்கு, கிடைத்த வெற்றி என்று புருஷோத்த மன் கூறியுள்ளார்.