தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்களா வை சீரமைக்க செலவிட பட்டது ரூ.45 கோடி அல்ல, ரூ.171 கோடி யாகும். கெஜ்ரிவாலின் பங்களாவுக்காக 22 அதி காரிகள் தங்கியிருந்த 4 கட்டிடங்கள் காலி செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகளின் மாற்று குடியிருப்புக்கு காமன் வெல்த் விளையாட்டு கிராமத்தில் 21 வகை, 5 அடுக்குமாடி குடி யிருப்புகளை தில்லி அரசு தலா ரூ.6 கோடிக்கு வாங்கியது என காங்கிரஸ் மூத்த தலை வர் அஜய் மக்கான் கூறி னார்.
2022-23இல் இந்தியா வின் தங்கம் இறக்குமதி 24.15% குறைந்து, 2.8 லட்சம் கோடி (35 பில்லி யன் டாலர்) ஆக வர்த்தக மாகியுள்ளது. 2021-22இல் 3.7 லட்சம் கோடி (46.2 பில்லியன் டாலர்) தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஞாயி றன்று நடைபெற்ற இள நிலை மருத்துவப் படிப்பு களுக்கான நீட் நுழைவுத் தேர்வை 20.9 லட்சம் பேர் எழுதினர்.
“மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன். என் எண்ணங்களில் மணிப்பூர் மக்களை வைத்திருக்கிறேன்” என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் மையம் கொண்டு ள்ள மோச்சா சூறாவளியால் மே 9 வரை ஆந்திரா, ஒடிசா மாநி லத்தில் அதிக மழை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேபிட் நிறுவனம் இரண்டு வாரங்களுக்குள் 82சதவீத ஊழியர்களை நீக்கியுள்ளது. கடந்த வாரம் 50சதவீத ஊழியர்களை நீக்கிய நிலையில், தற்பொழுது மேலும் 70 முக்கிய ஊழியர்களை நீக்கியுள்ளது.