states

img

விண்வெளித் துறையில் இஸ்ரோ புதிய சாதனை

சென்னை,டிச.31- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் விண் வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி திங்கட்கிழமை (டிச.30) இரவு 10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. இந்தியாவின் கனவுத் திட்டமாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்காக பல் வேறு பரிசோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நடத்தி வருகிறது.விண்ணில் செயற்கைக் கோள்களை ஒன்றாக இணைக்கும் நவீன தொழில் நுட்ப அறிவு, அதாவது ‘விண்வெளி டாக்கிங் பரிசோதனை’ என்ற பணிக் காக இஸ்ரோ ‘சேசர்’ (ஸ்பேடெ க்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேடெ க்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக் கோள்களை வடிவமைத்துள்ளது. இது ஒவ்வொன்றும் 220 கிலோ  எடை கொண்டதாகும். அதை  விண்ணில் வெவ்வேறு சுற்றுப் பாதையில் செலுத்தி, விண்வெளி யில் 2 செயற்கைக்கோள்களையும் இணைய வைக்கும் கடுமையான பரிசோதனையை நிகழ்த்த உள்ளது. இதற்காக  பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் 2 செயற்கைக் கோள்களை சுமந்தபடி திங்களன்று  (டிச.31) இரவு 10 மணி 15 வினா டிக்கு தீப்பிழம்பை கக்கியபடி விண் ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.  சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்க... விண்ணில் ஏவப்பட்ட இந்த 2  சிறிய செயற்கைக்கோள்கள் சந்திப்பதற்கும், இணைவதற்கும், பிரிவதற்கும் தேவையான தொழில்நுட்பம் உருவாக்கப்பட் டுள்ளது. இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் முயற்சிக்கு இது மிகவும் முக்கியமானது. விண்வெளி ரோபோ போன்ற எதிர்காலப் பயன்பாடுகளுக்கும், விண்வெளியில் மட்டுமின்றி தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தும் விண்கலங்கள், செயற் கைக்கோள்களை கட்டுப்படுத்து வதற்கும் இந்த தொழில்நுட்பம் ரொம்பவே முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 2 நிமிடம்  ஒத்திவைத்தது ஏன்? பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்காக திட்ட மிட்டு இருந்த நேரத்தில், அதே சுற்று வட்டப் பாதையில் வேறு செயற்கைக் கோள் கடந்து சென்றதால், அதில் மோதுவதை தவிர்க்க பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஏவும் நேரம் 2 நிமி டம் ஒத்தி வைக்கப்பட்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். புதிய மைல்கல்: சோம்நாத் பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், “பி.எஸ்.எல்.வி- சி60, இஸ்ரோவின் சாதனையில் ஒரு புதிய மைல்கல் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஸ்பேஸ் டாக்கிங் சோதனை வெற்றி யின் மூலம் உலகிலேயே இந்த செயல்முறையைத் தொடங்கிய 4 வது நாடாக இந்தியா திகழ்கிறது. மனிதனை விண்ணுக்கு அனுப்பு வது, விண்வெளியில் இந்திய  ஆய்வு மையத்தை நிறுவுவது, தரவுகளைச் சேகரிப்பது சந்திரயான்  - 4 திட்டம் உள்ளிட்ட இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு இது அடிப்படை சோதனையாக விளங்கும் என்று தெரிவித்தார்.